திரு (இயக்குநர்)
திரு கிருஷ்ணமூர்த்தி (Thiru ; பிறப்பு: சூலை 6, 1979) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.[1] இவர் தீராத விளையாட்டு பிள்ளை (2010), சமர் (2013) , நான் சிகப்பு மனிதன் (2014) போன்ற படங்களை இயக்கியுள்ளார்.[2] தொழில்சத்யம் (2008) படத்தில் இயக்குநர் ஏ. ராஜசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு, மூன்று முன்னணி நடிகைகளுடன் விஷால் நடித்த "தீராத விளையாட்டுப் பிள்ளை" (2010) மூலம் திரு இயக்குநராக அறிமுகமானார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது.[3] அதன் பிறகு இவர் மீண்டும் விஷாலுடன் சேர்ந்து "சமர் "(2013), "நான் சிகப்பு மனிதன்" (2014) ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.[4][5] சொந்த வாழ்க்கைஇவர் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகள் கனி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு தியா, தஷ்மாய் என இரு மகள்கள் உள்ளனர்.[6] திரைப்பட வரிசை
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia