நஞ்சுப் படர்க்கொடி
டாக்ஸிகோடென்ட்ரான் ரேடிகான்ஸ் (பாய்சன் ஐவி எனும் நஞ்சுப் படர்க்கொடி; இதன் பண்டைய பெயர்கள் ரஸ் டாக்ஸிகோடென்ட்ரான் , ரஸ் ரேடிகான்ஸ்) [1] அனகார்ட்டிகே என்னும் குடும்பத்தைச் சார்ந்த ஒரு செடியாகும். இது பலருக்கும் சருமத்தில் அரிக்கும் ஒரு வெடிப்பை உருவாக்கும் உருஷியால் என்னும் ஒரு சரும எரிச்சலை ஏற்படுத்தும் எண்ணெய்ச் சுரப்பி என மிகுந்த அளவில் அறியப்படும் ஒரு காட்டுப் படர்க்கொடி வகையாகும்; இந்த நமைச்சல் உருஷியாலால்-தோற்றுவிக்கப்படும் தொற்றுத் தோல் அழற்சி என அறிவியற் சொல்லாக அறியப்படுகிறது. ஆனால் இந்தக்கொடி உண்மையான படர்க்கொடி (ஹெடெரா) அல்ல. வளர்விடமும் எல்லைகளும்நஞ்சுப் படர்க்கொடி கனடாவின் கரையோர மாநிலங்கள், கியூபெக் மற்றும் ஆன்டாரியோ ஆகியவை உள்ளிட்ட வட அமெரிக்கா முழுவதும், மற்றும் வட டகோடாவைத் தவிர ராக்கீஸின் கிழக்கில் உள்ள அனைத்து ஐக்கிய மாநில நாடுகள், மற்றும் மெக்ஸிகோவின் மலை நிறைந்த பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றி1,500 m (4,900 அடி) (காண்க: காகுவிஸ்டில் அல்லது காகிஸ்டில்- நஹாட்1 சொல்) வளர்கின்றன; இவை மரங்கள் நிறைந்த பகுதியில், குறிப்பாக விளிம்புப் பகுதிகளில் வழக்கமாகக் காணப்படுகின்றன. வெளிப்படையான கற்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் திறந்தவெளிகள், பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஆகியவற்றிலும் இவை வளர்கின்றன. இது சிறிதளவே நிழலில் வளரக்கூடிய தன்மையுடையது என்றாலும், காட்டில் கீழே படரும் ஒரு செடியாகவும் வளர்கிறது.[1] இந்தச் செடி, புதிய இங்கிலாந்து, மத்திய-அட்லாண்டிக் மற்றும் தென்கிழக்கு ஐக்கிய நாடுகளின் புறநகர் மற்றும் புறநகர் தாண்டிய பகுதிகளில் மிகச் சாதாரணமாக உள்ளது. இதை ஒத்த இனமான, பாய்ஸன்-ஓக் மற்றும் டாக்ஸிகோடென்ட்ரான் ரிட்பெர்கி ஆகியவை மேற்கு வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. நஞ்சுப் படர்க்கொடி வளரக் கூடிய இடங்களின் உயர வரம்பானது வெவ்வேறு இடங்களில் வேறுபட்டதாக இருப்பினும், இது1,500 m (4,900 அடி)க்கு மேல் உயரமான இடங்களில் அரிதாகவே வளர்கிறது.[1] இந்தச் செடிகள் புதர் போல 1.2 மீட்டர்கள் (3.9 அடிகள்) உயரத்திற்கு, 10–25 cm (3.9–9.8 அங்) உயரத்திற்கு நிலப்படுகை போலவோ, அல்லது பல்வேறு ஆதாரங்களுடன் பற்றிக்கொண்டு ஏறும் கொடியாகவோ வளர்கின்றன. பழைய பற்றுக்கொடிகள் உறுதியான துணை வலுவுகளுடன், முதற்பார்வையில் மரத்தின் பெருங்கிளைகள் என தவறாக எண்ணக் கூடிய வண்ணம் பக்கவாட்டுக் கிளைகளை வெளியிடுகின்றன. இது பாலைவனங்களிலும் உலர்ந்த நிலைகளிலும் வளர்வதில்லை என்றாலும், மண்ணின் ஈரத்தன்மைக்கு இது குறிப்பான மிகு உணர்வு கொண்டிருப்பதில்லை. இது பல்வகை மண் வகைகளிலும், மற்றும் மண்ணின் பிஹெச் 6.0 (அமிலத்தன்மை)யிலிருந்து 7.9 வரை (மிதமான காரத்தன்மை) இருப்பதிலும் வளர்கின்றது. இது, பருவகால வெள்ளங்கள் மற்றும் சற்றே உப்பு கொண்ட நீர் உள்ள இடங்களில் வளரக் கூடியது.[1] இது ஐரோப்பியர்கள் முதலில் வட அமெரிக்காவிற்குள் வந்தபோது இருந்ததை விட தற்பொழுது மேலும் பொதுவானதாக உள்ளது. காடுகள் மற்றும் மேம்படுத்தாத நிலங்களுக்கு அருகில் முன்னேறி வரும் கட்டிடத் தொழிலானது "விளிம்பு சாயல்களை"த் தோற்றுவித்து, இத்தகைய இடங்களில் நஞ்சுப் படர்க்கொடி பரந்தகன்ற செழுமையான கொடிகளாய் வளர உதவுகிறது. இது ஐக்கிய நாடுகளின் மின்னெஸோட்டா மற்றும் மிச்சிகன் மற்றும் கனடாவின் மாநிலமான ஆன்டேரியோ ஆகிய இடங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த களைச்செடி எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. நஞ்சுப் படர்க்கொடி செடியும் அதன் இனச் செடிகளும் ஐரோப்பாவில் ஏறத்தாழ அறியப்படாமலேயே உள்ளன. ஐக்கிய மாநிலங்கள் மற்றும் கனடாவிற்கு வருகை புரியும் பல ஐரோப்பியர்களும் இத்தகைய ஆபத்தான செடி இந்தக் கண்டத்தில் மிகச் சாதாரணமாகக் காணப்படுவதை அறிந்து வியப்படைகின்றனர். விரிவுரை![]() நஞ்சுப் படர்க்கொடிச் செடியின் உதிரக்கூடிய இலைகள் மூன்று வாதுமை-வடிவ சிற்றிலைகளுடன் முச்சிற்றிலை வடிவமாய் காணப்படுகின்றன.[1] இலையின் நிறம் இளம் பச்சையிலிருந்து (சாதாரணமாக இளம் இலைகள்) அடர்ந்த பச்சை வரை (முதிர்ந்த இலைகள்) உள்ளன. உதிரும் பொழுது அவை ஒளிரும் சிவப்பு நிறமாக மாறுகின்றன; எனினும் இலைகள் விரிவடையும் போது சிவப்பாகவும், முதிரும்போது பச்சையாக மாறியும், பின்னர் உதிரும்பொழுது மறுபடி சிவப்பாக, செம்மஞ்சள் அல்லது மஞ்சளாக மாறுவதாகவும் வேறு சில தோற்றுவாய்கள் உரைக்கின்றன. முதிர்ந்த இலைகளின் சிற்றிலைகள் சற்றே பளபளப்பாக இருக்கின்றன. இந்தச் சிற்றிலைகள் மூன்றிலிருந்து 12 செமி வரையிலும், அரிதாக 30செமி வரையிலும், நீளம் கொண்டுள்ளன. ஒவ்வொரு சிற்றிலையிலும் அதன் விளிம்புகளில் குறைந்த அளவு பற்களே உள்ளன; அல்லது அவை இல்லாமல் இதன் மேற்பரப்பானது வழவழப்பாக அமைந்துள்ளது. மேலே பற்றி எழும்பும் கொடியில் சிற்றிலைக் கொத்துக்கள் ஒன்று விட்டு ஒன்றாக இருக்கின்றன; மேலும் இந்தச் செடியில் முட்கள் இருப்பதில்லை. அடிமரத்தைப் பற்றி வளரும் கொடி வகைகள் உயர்ந்த வேர்க்கால்கள் மூலமாக அவற்றோடு இறுக ஒட்டியிருக்கின்றன.[2] இந்தக் கொடி வகைகள் வெளிப்புற வேர்களை உருவாக்குகின்றன, அல்லது இந்தச் செடி வேர்த்தண்டுக்கிழங்குகளிலிருந்து அல்லது வேர்த்தலைகளிலிருந்தும் பரவக்கூடும். நஞ்சுப் படர்க்கொடிச் செடியின் பால் போன்ற சாறானது காற்றில் வெளிப்பட்ட பின்பு கருமையடைகிறது. நஞ்சுப் படர்க்கொடி தாவர மற்றும் பாலின ஆகிய இரு முறைகளிலும் பரவுகிறது. நஞ்சுப் படர்க்கொடி ஒரு இரு பால் செடியாகும்; இதில், மே மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை மலர்கள் உருவாகின்றன. மஞ்சள் அல்லது பச்சையான-வெள்ளை மலர்கள் தெளிவாகப் புலப்படாதவையாகவும், இலைகளுக்கு மேல் எட்டு செமீ உயரத்தில் கொத்துக்களாகவும் அமைகின்றன. பெர்ரி கனியைப் போன்ற, ஆகஸ்ட் துவங்கி நவம்பர் மாதம் வரை முதிர்வதான இதன் உள்ளோட்டுச் சதைக்கனி, சாம்பல்-வெண்மை நிறத்தைக் கொண்டிருக்கும்.[1] இதன் கனிகள், சில பறவைகள் மற்றும் சில விலங்குகளுக்கு மிகவும் உவப்பான குளிர்கால உணவாகும். இதன் விதைகள் பெரும்பாலும் விலங்குகளால் பரப்பப்படுகின்றன; இவை அவற்றின் செரிமானப்பாதை வழியாக வெளிவந்த பின்னரும் வளரும் ஆற்றல் கொண்டுள்ளவையாகத் திகழ்கின்றன. அடையாளமறிவதற்கான உதவிகள்நஞ்சுப் படர்க்கொடி செடியைக் கண்டறிவதற்கு, பெரும்பாலான நேரங்களில் கீழ்க்காணும் மூன்று இயல்புகள் போதுமானவை: (அ)மூன்று சிற்றிலைகளின் கொத்து, (ஆ)ஒன்றை அடுத்து மற்றொன்றாக உள்ள இலையமைப்பு, மற்றும் (இ)முட்கள் இன்மை. இந்த எளிமையான விவரிப்பு வேறு பல செடிகளுக்கும் பொருந்தும் எனினும், நஞ்சுப் படர்க்கொடி செடியைப் பற்றிக் கண்டறிய இயலாதவர்கள் இத்தகைய இயல்புகள் உள்ள எந்தச் செடியையும் விழிப்புடன் தவிர்த்து விட வேண்டும். இலைகள் பழுதடைதல், குளிர் காலங்களில் இலைகள் இல்லாதிருத்தல் மற்றும் சுற்றுச் சூழல் மற்றும்/அல்லது மரபு முறைகள் ஆகியவற்றால் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சியமைப்புகள் போன்றனவற்றால், அனுபவம் நிறைந்தவர்களுக்கும் இந்தச் செடியைக் கண்டறிவது சில சமயங்களில் கடினமாக உள்ளது. நினைவு கூரத்தக்க பல்வேறு பாடல்கள் நஞ்சுப் படர்க்கொடியின் குணாதிசயமான தோற்றத்தை விவரிக்கின்றன:[3]
!" மரத்திலுள்ள நஞ்சுப் படர்க்கொடியின் கொடிகள் ஒரு வித உரோமமுள்ள "கந்தலான" தோற்றம் கொண்டுள்ளன. மரம் ஏறுபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு இந்தப் பாடல் எச்சரிக்கிறது.
உடலின் மீதான விளைவுகள்நஞ்சுப் படர்க்கொடிச் செடியால் உருவாக்கப்படும் எதிர்விளைவான, உருஷியால்-தூண்டு தொற்று தோல் அழற்சி என்பது ஒரு ஒவ்வாமை எதிர்விளைவு. 15%[7] லிருந்து 30%[8] மக்கள் ஒவ்வாமைக்கான பதிலிறுப்பு கொண்டிருப்பதில்லை; எனினும் பலர், மீண்டும் அல்லது அதிக அளவில் செறிவுற்ற உருஷியாலுக்கு உட்படுத்தப்பட்டால் ஒவ்வமைக்கான மிகு உணர்ச்சியைக் கொள்வர். இத்தகைய எதிர்விளைவுகள் கடும் ஒவ்வாமை என்னும் நிலைக்குக் கொண்டு செல்லலாம். ![]() உருஷியால் என்பது தொட்டவுடன் தோலுடன் பிணைந்து கொண்டு பலத்த நமைச்சலை உருவாக்கும்; இதுவே சிவந்த நிறமுடன் வீக்கமடைந்து அல்லது நிறமற்ற தடிப்புகளாக மாறிப் பின்னர் கொப்புளங்கள் ஆகிறது. சில பாரம்பரிய மருந்துகள் இதன் மீது பயனற்றவை என்று அண்மையிலான ஆய்வுகள் உரைப்பினும், இந்தச் சிதைவுகள் காலமைன் என்னும் கழுவுநீர்மம் கொண்டு சிகிச்சையளிக்கப்படலாம்; பர்ரோவின் நீர்மம் இந்தப் புண்களை அமிழ்த்தியோ, கழுவியோ அசௌகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது[9].[10][11] நமைச்சலிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கு சாதாரணமாக கிடைக்கும் தயாரிப்புகள்-அல்லது எளிமையான புல்லரிசிக்கூழால் கழுவுதல் மற்றும் சமையல் சோடா-ஆகியவை நஞ்சுப் படர்க்கொடிச் செடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தோல் மருத்துவர்களால் தற்பொழுது பரிந்துரைக்கப்படுகிறது.[12] தீவிரமான தருணங்களில், திறந்த கொப்புளங்களிலிருந்து தெளிவான திரவங்கள் சுரக்கும். இந்த நிலையில் புறணி இயக்க ஊக்கிகள் கொண்டு சிகிச்சை அளிப்பது தேவைப்படும். ![]() இவ்வாறு அரிப்பெடுக்கும் கொப்புளங்களிலிருந்து சுரக்கும் திரவங்கள் நச்சுத்தன்மையைப் பரப்புவதில்லை.[13][14][15] சில இடங்கள் அதிக அளவில் நச்சு கொண்டு மற்ற இடங்களை விட வேகமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன அல்லது முதலில் நச்சுத்தன்மை பரவிய பொருளோடு இன்னமும் இணைப்பு இருப்பதால் தொற்று பரவுகிறது என்பதையே பரவும் தோல் கரப்பான்கள் உணர்த்துகின்றன.[13] கொப்புளங்கள் மற்றும் திரவம் சுரப்பது என்பதானது ரத்த நாளங்களுக்குள் இடைவெளிகள் உண்டாகி அவையே சருமத்தின் வழியாக திரவமாக ஒழுகுவதால் விளைவதாகும்; சருமத்தைக் குளிரச் செய்து விட்டால், இந்த நாளங்கள் குறுகி திரவம் சுரப்பதும் குறைந்து விடும்.[மேற்கோள் தேவை] நஞ்சுப் படர்க்கொடிச் செடியை எரித்து அதன் புகையை சுவாசித்தால், இந்தத் தடிப்பானது நுரையீரல்களின் ஓரங்களில் ஏற்படும். அதனால் மிகுந்த வலியும், சில வேளைகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு சுவாசத்தில் சிரமும் நிகழக்கூடும்.[16] இந்த நஞ்சுப் படர்க்கொடிச் செடியை உட்கொண்டால், செரிமான உறுப்புகள், சுவாசப் பாதை, சிறுநீரகங்கள் அல்லது வேறு உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.[மேற்கோள் தேவை] நஞ்சுப் படர்க்கொடியால் விளைந்த தோல் கரப்பான், அதன் தீவிரம் மற்றும் சிகிச்சையைப் பொறுத்து, ஒன்றிலிருந்து நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். சில அரிதான சமயங்களில், நஞ்சுப் படர்க்கொடியின் எதிர்விளைவுகளின் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பதும் அவசியமாகலாம்.[13][17] உருஷியால் பல வருடங்களுக்கு எண்ணெய்ச் செயற்பாட்டுடன் இருக்கக்கூடும். எனவே காய்ந்து உதிர்ந்த இலைகள் மற்றும் கொடிகளைத் தொடுவதும் கூட எதிர்விளைவை ஏற்படுத்தலாம். மேலும், செடியிலிருந்து மற்ற பொருள்களுக்கு மாறிய எண்ணெய் (செல்லப்பிராணிகளின் ரோமம் போன்றவை) இந்தப் பொருள் தோலுடன் தொடர்புறும் போது தோல் கரப்பானை உருவாக்கலாம்.[18][19] இந்த எண்ணெய் பட்ட ஆடைகள், கருவிகள் மற்றும் இதர பொருட்கள் ஆகியவற்றை, இது மேலும் பரவுவதைத் தடுக்கும் வண்ணம், நன்கு கழுவ வேண்டும். நஞ்சுப் படர்க்கொடிச் செடிக்கு மிகு உணர்வு கொண்டவர்கள் இதே போன்ற ஒரு அனுபவத்தை மாங்காய்களிடத்தும் பெறக்கூடும். மாங்காய்களும் நஞ்சுப் படர்க்கொடி சார்ந்த அதே (அனகார்டிகே) குடும்பத்தையே சார்ந்தவை; மாமரத்தின் சாறு மற்றும் மாங்காய்களின் தோல் உருஷியால் போன்ற ஒரு ரசாயனக் கலவை கொண்டதாகும்.[20] இதனுடன் தொடர்புடைய வாச மலர்கள் பூக்கும் செடியான ரஸ் அரோமாட்டிகா அல்லது ஜப்பானிய லேக்கர் மரம் ஆகியவற்றைத் தொடும்போதும், சில சமயங்களில், இதைப் போன்ற எதிர்விளைவுகள் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்த-தோற்றமுள்ள செடிகள்
நஞ்சுப் படர்க்கொடிச் செடி ஒன்று மாற்றி ஒன்றாக இலைகளைக் கொண்டிருக்கும். இதன் பொருள் மூன்று-சிற்றிலைகள் முக்கியக் கிளையை ஒட்டி ஒன்று மாற்றி மற்றொன்றாக இருக்கும் என்பதாகும். மேபிள் (பாக்ஸ்-எல்டர் இதன் ஒரு வகையாகும்) மரம் நேர் மாறான இலைகளைக் கொண்டிருக்கும்; அடுத்த இலைத் தண்டு நேர் மாறாக இருப்பது பாக்ஸ்-எல்டர் செடியின் ஒரு இயல்பாகும்.
வெர்ஜினியா படர்க்கொடி மற்றும் நஞ்சுப் படர்கொடி ஆகிய இரண்டுமே பொதுவாக ஒன்றாகவே வளர்வன; இவை ஒரே மரத்தில் கூட வளரலாம். நஞ்சுப் படர்க்கொடியிடம் எந்த ஒவ்வாமை-எதிர்விளைவும் இல்லாதவர்கள் கூட வெர்ஜினியா படர்க்கொடியின் சாறில் இருக்கும் ஆக்ஸலேட் படிகங்களுக்கு ஒவ்வாமை-எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்க.
நஞ்சுப் படர்க்கொடி தன் சூழலின் ஈரத்தன்மை மற்றும் ஒளித்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஒன்று படர்க்கொடியைப் போல் வளரும் அல்லது புதராக கருவாலி-வகையைப் போல் வளரும் என்பதே இதன் காரணமாகும். இந்தப் படர்க்கொடி வகை குறைந்த சூரிய வெளிச்சத்துடன் கூடிய நிழலுள்ள பகுதிகளை விரும்புகிறது. இது அடிமரத்தைப் பற்றிக்கொண்டு ஏற முனைகிறது மற்றும் இது தரையிலும் மிகுந்த விரைவில் பரவக்கூடியது.
குறிப்புகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia