நேபாள தேசிய சபை
வரலாறுமுந்தைய தேசிய சபை 15 சனவரி 2007ல் கலைக்கப்பட்டு, ஓரவை கொண்ட இடைக்கால சட்டமன்றம் நிறுவப்பட்டது. பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 275 உறுப்பினர்களுடன் பிரதிநிதிகள் சபை மற்றும் 59 உறுப்பினர்களுடன் தேசிய சபை என ஈரவை முறைமை கொண்ட நாடாளுமன்றத்தை நிறுவ வழி வகை செய்யப்பட்டுள்ளது.[3] வாக்காளர்கள்நேபாளாத்தின் 7 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நேபாள உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மற்றும் துணை மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் துணை மேயர்கள், நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களே, தேசிய சபையின் 56 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் ஆவார்.[4] மீதம் உள்ள மூன்று உறுப்பினர்கள், அமைச்சரவையின் கருத்தின் அடிப்படையில், நேபாளக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். இட ஒதுக்கீடுநேபாள அரசியல் அமைப்புச் சட்டம், தேசிய சபை உறுப்பினர்களில் 21 பொதுப் பிரிவினர், 21 பெண்கள், 7 தலித்துகள் மற்றும் 7 மாற்றுத் திறனாளிகள் அல்லது சமயச் சிறுபான்மையினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. பதவிக் காலம்தேசிய சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிகிறது. தேசிய சபை உறுப்பினர் தேர்தல், 2018நேபாள தேசிய சபையின் 59 உறுப்பினர்களில் 56 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 7 பிப்ரவரி 2018 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தேசிய சபைக்கான 2,056 வாக்காளர்களில், 550 ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1,506 மாநகராட்சி மற்றும் துணை மாநகராட்சிகள், நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆவார். இத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க, ஏழு நேபாள மாநிலங்களின் தலைநகரங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பெயருடன் கூடிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. [5] தேர்தல் முடிவுகள்நேபாள தேசிய சபையின் 56 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 7 பிப்ரவரி 2018 அன்று நடைபெற்ற தேர்தலில், அரசியல் கட்சி வாரியாக வெற்றி விவரம்[6]:
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia