பாகவத புராணம் என்பது பதினெண் புராணங்களில் ஐந்தாவது புராணமாகும். இது பகவான் என வைணவர் போற்றும் திருமாலின் அவதாரம் பற்றிக் கூறுவது. இதனை வடமொழி நூல்கள் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல்-பாங்கினை மட்டுமே தமிழ் பின்பற்றியுள்ளது.
இவற்றுள் இதிகாசம், புராணம் என்னும் இரண்டு வகையான நூல்கள் மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன[1].
பாகவதம்
வடமொழியில்வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். அருளாளதாசர் பாகவதம் என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை மு. அருணாசலம் சுருக்கமாகத் தந்துள்ளார். அவை பொருள் நோக்கில் பகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகிறது.
கண்ணன் பிறக்கிறான். அவன் படத்தை உருக்குமணி காண்கிறாள். (நாரதன் கூற்று) [7]
கம்சன் தங்கை தேவகி திருமணம். குழந்தைகள் கொல்லப்படல். எட்டாவது குழந்தை கண்ணன் யசோதையிடமும், உரோகினி பெற்ற பெண் குழந்தை தேவகியிடமும் வசுதேவரால் இடம் மாறல். பெண் குழந்தையைக் கொல்லும்போது அக்குழந்தை பறத்தல். கம்சனைக் கொல்லக் கண்ணன் வளர்கிறான் எனல்.[8]
கண்ணன் வெண்ணெய் திருடுதல், அவன் வயிற்றில் உலகம் காணுதல் [9]
கண்ணன் குணாதிசயங்களை நாரதன் சொல்லக் கேட்டு உருக்குமணி உருகல் [15]
விதர்ப்பராசன் தன் மகளைக் கண்ணனுக்குத் தர எண்ணுகிறான். அவன் மகன் 'உருக்குமி' அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க முடிவு செய்து ஓலை அனுப்புகிறான். உருக்குமணி கண்ணனுக்கு ஓலை அனுப்புகிறாள். தாய் உருக்குமணியைக் கோயிலுக்குக் கூட்டிச் சென்று அங்கு வந்த கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் [16]
உருக்குமி படைகொண்டு தாக்குகிறான். பலராமன் உருக்குமியின் மார்பில் தாக்கி அவன் தலையை முறிக்கப் போகும்போது உருக்குமணி வேண்டுகோளின்படி அவனை மானபங்கப்படுத்தி விட்டுவிட்டுத் துவாரகை மீள்கிறான் [17]
சாம்பவதியையும், சத்தியபாபாவையும் மணத்தல் - மிகச் சிறந்த 'சமந்தக மணி ஒன்றை, சத்தராசத்து என்னும் மன்னவன் வைத்திருந்தான். கண்ணன் அதனைத் தனக்குக் கேட்டான். மன்னன் கொடுக்கவில்லை. அவன் தம்பி அதனை அணிந்துகொண்டு காட்டில் வேட்டையாடச் சென்றான். சிங்கம் ஒன்று அவனைக் கொன்று மணியோடு இழுத்துச் சென்றது. கரடி அரசன் சாம்பவான் அந்தச் சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் மகள் சாம்பவதிக்குக் கொடுத்தான். கண்ணன் சாம்பவதியை மணந்து அந்த மணியைத் தனதாக்கிக்கொண்டான். நிகழ்ந்ததை அறிந்த மன்னன் சத்தராசித்து தன் மகள் சத்தியபாமை என்பவளையும் கண்ணனுக்கு மணம் செய்துவைத்தான். [19]
கண்ணன் தன்னை விரும்பித் தவம் செய்த 'காளிந்தி' என்பவளை மணந்தான். [20]
மித்திர விந்தை என்பவளின் சுயம்வரத்துக்குச் சென்று அவளைக் கண்ணன் மணந்தான். [21]
ஏழு காளைகளை அடக்கி 'நாக்கின சிந்து' என்பவளை மணந்தான். [22]