பாசிர் பூத்தே மாவட்டம்
பாசிர் பூத்தே மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Pasir Puteh; ஆங்கிலம்: Pasir Puteh District; சீனம்: 巴西富地县; ஜாவி: ڤاسير ڤوتيه;) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பாசிர் பூத்தே எனும் பெயரில் ஒரு நகரமும் உள்ளது. மலேசிய மக்களவைத் தொகுதியின் பெயரும் பாசிர் பூத்தே. கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவின் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் செமாராக் ஆற்றின் (Semerak River) கரையில் பாசிர் பூத்தே நகரம் அமைந்துள்ளது. அதே சமயத்தில் பாசிர் பூத்தே மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தென்கிழக்கில் எல்லையாக உள்ளது. வரலாறுஇந்த நகரம் பாசிர் பூத்தே என்று அழைக்கப் படுவதற்கு முன்பு, பங்காலான் லிம்போங்கான் (Pangkalan Limbungan) என்று அழைக்கப்பட்டது. கிளாந்தான் சுல்தான் நான்காம் முகமது (Sultan Muhammad IV) இங்கு வருகை தந்த பிறகு, பாசிர் பூத்தே நகரம் அதன் பெயரைப் பெற்றது. செமாராக் ஆற்றின் கரையோரங்களில் பளபளக்கும் வெண்மணலைப் பார்த்து சுல்தான் முகம்மது ஈர்க்கப் பட்டார். 1911-ஆம் ஆண்டில், சுல்தான் இந்த இடத்தின் பெயரை பாசிர் பூத்தே என்று அறிவித்தார். பாசீர் பூத்தே என்பது ஒரு மலாய்ச் சொல். வெள்ளை மணல் என்று பொருள். மக்கள் தொகையியல்
2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி பாசிர் பூத்தே மாவட்டத்தின் மக்கள்தொகை 136157. பெரும்பான்மையினர் கிளாந்தான் மலாய் மக்கள்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia