பிரமோத் மகாஜன்
பிரமோத் வியாங்கதேஷ் மகாஜன் ( Pramod Vyankatesh Mahajan ) (30 அக்டோபர் 1949 - 3 மே 2006) மகாராட்டிராவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) இரண்டாவது தலைமுறை தலைவரான இவர் ஒப்பீட்டளவில் இளம் "தொழில்நுட்ப" தலைவர்களின் குழுவில் சேர்ந்தவர். இவர் இறக்கும் போது, பாஜகவின் தலைமைப் பதவிக்கான அதிகாரப் போட்டியில் இருந்தார்.[2] இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும்]] பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் மும்பை - வடகிழக்கு தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தல்களில் இரண்டு முறை மட்டுமே போட்டியிட்டார். இவர் 1996இல் வென்றார், ஆனால் 1998 இல் தோற்றார். 2001 முதல் 2003 வரை பிரதமர் அடல் பிகாரி வாச்பாயின் அரசில் தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றி இந்தியாவின் செல்பேசி புரட்சியில் இவர் பெரும் பங்கு வகித்தார். தனது கட்சியின் சித்தாந்தத்தைத் தாண்டி தனது வாழ்நாள் முழுவதும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடனான நல்ல உறவின் காரணமாக இவர் ஒரு வெற்றிகரமான நாடாளுமன்ற விவகார அமைச்சராக பரவலாகக் காணப்பட்டார்.[3] 2006 ஏப்ரல் 22 அன்று, குடும்பத் தகராறு காரணமாக இவரது சகோதரர் பிரவின் மகாஜனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரவினுக்கு 2007இல் நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia