புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம்
புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் (மலாய்: Pusat Konvensyen Antarabangsa Putrajaya; ஆங்கிலம்: Putrajaya International Convention Centre) (PICC) என்பது மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள முக்கிய மாநாட்டு மையம் ஆகும். புத்ராஜெயா 5-ஆவது வளாகத்தில் (Precinct 5 Putrajaya) உயர்ந்த குன்றுப் பகுதியில் அமைந்து இருகும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் 135,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானம் செப்டம்பர் 2003-ஆம் ஆண்டு முடிவுற்றது.[1] பொதுஇந்த மாநாட்டு மையத்திற்கு வடிவம் கொடுத்தவர் மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) ஆகும். அக்டோபர் 2004-இல் புத்ராஜெயா மாநாட்டு மையம் (Putrajaya Convention Centre) எனப் பெயரிடப்பட்டது.[2] பின்னர் பன்னாட்டு நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பெயரிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் லண்டன், தோக்கியோ, பாரிஸ் போன்ற நகரங்களில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்களுக்கு இணையாக புத்ராஜெயா மாநாட்டு மையத்தின் பெயரும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் என மாற்றம் செய்யப்பட்டது.[3] முக்கிய நிகழ்வுகள்புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia