மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை
மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை (மலாய்: Jabatan Wilayah Persekutuan; (JWP) ஆங்கிலம்: Department of Federal Territories) என்பது, முன்பு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சின் கீழ், அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாக இருந்தது. தற்சமயம் மலேசியப் பிரதமர் துறையின் கீழ் தனி ஒரு துறையாகச் செயல்படுகிறது. மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளான கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மூன்று பகுதிகளின் நிர்வாகம் (Administration) மற்றும் மேம்பாடு (Development) ஆகியவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ளது.[1] பொறுப்பு துறைகள்மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகம்:
அமைப்பு
வரலாறு1972 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு (Ministry of Federal Territories) உருவாக்கப்பட்டது. கோலாலம்பூர் மாநகரம் அந்த அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2] 1984-ஆம் ஆண்டு, லபுவான் நகராட்சி மன்றம் (Labuan Corporation) நிறுவப்பட்டபோது; கோலாலம்பூர், லபுவான் ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஒரே குடையின் கீழ் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்துல்லா அகமது படாவிஎனவே 1987-ஆம் ஆண்டு, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் புத்ராஜெயா மாநகராட்சி மன்றம் பிப்ரவரி 1, 2001 இல் நிறுவப்பட்டது. 27 மார்ச் 2004-இல், அப்போதைய மலேசியப் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் (Tun Abdullah Ahmad Badawi) அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு திட்டமிடல் மேம்பாட்டுப் பிரிவு (Klang Valley Planning and Development Division); ஆகியவை இணைக்கப்பட்டு முழு அளவிலான அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. நஜிப் துன் ரசாக்அந்த அமைச்சு லபுவான் மற்றும் புத்ராஜெயா பிரதேசங்களின் அதிகார வரம்பையும் பெற்றது. 14 பிப்ரவரி 2006-இல், டத்தோ ஸ்ரீ சுல்லசுனான் ரபீக் (Datuk Seri Zulhasnan Rafique) என்பவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 23 அக்டோபர் 2009-இல், 2010-ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், மலேசியப் பிரதமராக இருந்தார். நாடளாவிய நிலையில் நகர்ப்புற வறுமையை ஒழிப்பதற்கும் (Eradicate Urban Poverty); நகர நலன் திட்டத்தை (City Welfare Program) மேம்படுத்துவதற்கும் கூட்டரசு பிரதேச அமைச்சின் செயல்பாடுகளும் பொறுப்புகளும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். நகர்ப்புற நல்வாழ்வு பிரிவுஇதன் தொடர்பாக, 2009 நவம்பர் 13-ஆம் தேதி, கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு அதிகாரப்பூர்வமாக மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு (மலாய்: Kementerian Wilayah Persekutuan dan Kesejahteraan Bandar; ஆங்கிலம்: Ministry of Federal Territories and Urban Wellbeing) என மாற்றம் செய்யப்பட்டது. 2013 தேர்தலுக்குப் பிறகு, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சில் இருந்து வந்த நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well Being Function) எனும் பிரிவு; மலேசிய வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சிற்கு (Ministry of Housing and Local Government) மாற்றப்பட்டது. மேலும் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு என்று அழைக்கப்பட்ட அமைச்சு மீண்டும் கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு (Ministry of Federal Territories) என மறுபெயரிடப்பட்டது. மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் நிர்வாகம்மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் உள்ளூர் நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன:
கூட்டரசு நிறுவனங்கள்தற்போதுள்ள உள்ளூராட்சிகள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களின் நிர்வாகிகள்; மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளனர். நிர்வாகங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யும் பணிக்காக இந்தத் துறை உருவாக்கப்பட்டதால், இந்த நிறுவனங்களின் மீது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. இந்தத் துறையின் கீழ் உள்ள குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்:
பிரிவுகள்மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் உயர் நிர்வாகமானது; அமைச்சர், துணை அமைச்சர், நாடாளுமன்ற செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் இரண்டு துணைத் தலைமைச் செயலாளர்களை உள்ளடக்கியதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. துணைத் தலைமைச் செயலாளர் அமைச்சின் பல பணிப் பிரிவுகளை நிர்வகிக்கிறார். கூட்டரசு பிரதேசங்களின் உள்ளூர் நிறுவனங்கள்; அவை அந்தந்த தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இந்த நிறுவனங்கள் தலைமைச் செயலாளரின் மேற்பார்வையில் உள்ளன.
மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் நிறுவன விளக்கப்படம்
சான்றுகள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia