புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில்![]() புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. நிருவாகம்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1][2] வரலாறுகி.பி.1739-1763இல் இக்கோயில் கட்டப்பட்டது. நேபாள மன்னர் ஒருவரால் தஞ்சாவூர் மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள் கருவறையை அலங்கரிக்கின்றன. கோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.[3] இக்கோயிலில் உள்ள இராமர் ,சீதை, இலக்குவன் ஆகியோரின் உற்சவர் சிலைகள் 1400 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகின்றன. இவை இங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள நீடாமங்கலம் அருகே உள்ள பூவானூர் கிராமத்தில் கண்டெடுக்கபட்டு இங்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.[4] கோயில் அமைப்புராஜகோபுரம், பலி பீடம், கொடி மரம், திருச்சுற்று, முன்மண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானம் சௌந்தர்ய விமானம் என்று அழைக்கப்படுகிறது. கருவறையில் கோதண்ட இராமர் வலக்கையில் சரமும், இடக்கையில் கோதண்டமும் ஏந்தியுள்ளார். அவரின் வலப்புறம் சீதையும், இடப்புறம் இலக்குவனும் நின்ற கோலத்தில் உள்ளனர். திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, தல மரமான புன்னை மரம், ஜயவீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை உள்ளன.இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு 12 படிகள் ஏறிச் செல்லவேண்டும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
படத்தொகுப்பு |
Portal di Ensiklopedia Dunia