தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்
வீரபத்திரர் கோயில் என்பது தஞ்சாவூரில் அமைந்துள்ளது. அமைவிடம்நாயக்கர் காலக் கோயில்களுள் வீரபத்திரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தஞ்சைக் கோட்டையின் கிழக்கு வாயிலுக்கு எதிரில், அகழிக்கு வெளியே அதனையொட்டி அமைந்துள்ள இரண்டு கோயில்களில் தென் புறம் இக்கோயில் உள்ளது. [1] வரலாறு![]() முதல் நாயக்க மன்னராகிய செவ்வப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கோவிந்த தீட்சிதர் முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் ஒட்டக்கூத்தரைப் போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். [1] இக்கோயில் முன் மண்டபம், மூலவர் கருவறை, இறைவி கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. உள்ளே நுழையும்போது ஒரு நந்தி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2] இறைவன்கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். கும்பகோணம் வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. [1] இக்கோயிலின் மூலவராக அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். இறைவி நிஷ்டாம்பிகை ஆவார். இவற்றையும் காண்கஅடிக்குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia