பெண்ணேஸ்வர மடம்
பெயராய்வுஇந்த ஊரில் 33 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஊரின் பழைய பெயர் பெண்ணையாண்டார் மடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணையாண்டார் மடம் என்பது சமசுகிருதமயமாக்கலால் பெண்ணை ஈசுவரர் மடம் என்றும் பின்னர் பெண்ணேஸ்வர மடம் என்றும் படிப்படியாக மாறியுள்ளது தெரிய வருகிறது.[4] அமைவிடம்இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள்வகைப்பாடு2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 663 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,686 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,352, பெண்களின் எண்ணிக்கை 1,334 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 59.31% என உள்ளது.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும். பெண்ணேசுவரர் கோயில்இவ்வூரில் மிகப் பழமையான சிவன் கோயில் உள்ளது. கோயிலின் பெயர் பெண்ணேஸ்வரர் கோயில் ஆகும். கோயில் அருகே தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த கோயில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது[6] . தமிழ் நாட்டிலேயே அதிகமான நவகண்டச் சிற்பங்களை கொண்டுள்ளது[சான்று தேவை]. மேலும் அருகே அதிகமான சிற்பங்களும் உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia