தற்போதைய பொதுநலவாய உறுப்பினர்கள் (கரும் நீலம்), தற்போதைய இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் (பச்சை), முன்னாள் உறுப்பினர்கள் (வெளிர் சிவப்பு), மற்றும் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களும் அரச சார்பகங்கள் (இளம் நீலம்)
பொதுநலவாய நாடுகள் தன்னாட்சியுள்ள இறைமையுள்ள 56 அரசுகளின் தன்னார்வல சங்கமாகும். இவற்றில் பெரும்பான்மையானவை முன்னாள் பிரித்தானியாவின் குடிமைப்பட்ட நாடுகள் அல்லது அக்குடியேற்றங்களின் சார்பகங்களாகும்.
இது ஓர் அரசியல் ஒன்றிணைப்பு இல்லாதமையால் எந்த ஒரு அரசும் மற்ற நாட்டு அரசுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. பல்வேறு சமூக, அரசியல்,பொருளியல் பின்னணிகளைக் கொண்ட நாடுகள் சமமான நிலையில் 1971இல் வெளியிட்ட சிங்கப்பூர் பிரகடனத்தின்படி பொதுவான இலக்குகளுடன் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் சர்வதேச அமைப்பு ஆகும்.[1] இந்த பொதுவான இலக்குகளில் மக்களாட்சி, மனித உரிமைகள், நல்லாட்சி, சட்ட ஆட்சி, தனிநபர் சுதந்திரம், சமத்துவம், கட்டற்ற வணிகம், பல்வகைமை, மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பது அடங்கியுள்ளது. இவற்றை தங்களுக்குள்ளான திட்டங்கள் மூலமும் சந்திப்புகளின் மூலமும் நிறைவேற்ற முயல்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பெறும் பொதுநலவாய விளையாட்டுக்கள் இதற்கோர் எடுத்துக்காட்டாகும்.[2]
தற்போதைய உறுப்பினர்கள்
அனைத்து பட்டியல் தகவல்களும் பொதுநலவாய செயலகத்தின் உறுப்பினர்களின் பட்டியலிலுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பிடாவிடத்து, பெரும்பாலான மக்கள்தொகை 2007 மதிப்பீடுகளின் அடிப்படையானவை.[3]
குறிப்பு: இந்தப் பட்டியலை ஆங்கில அகரவரிசையில் அல்லது காலவரிசையில் பயன்படுத்தி அடுக்கலாம்.
சனவரி 1, 1901இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி அரசு முறை தகுதி) வழங்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 நிறைவேற்றப்பட்ட காலத்தில் மேலாட்சி அரசு முறை பெற்றிருந்த குடியேற்றப்பகுதிகளில் ஆத்திரேலியாவும் ஒன்றாக இருந்தது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை 1942 வரை ஆத்திரேலியா தனது சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. 1942இல் தான் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் ஏற்பு சட்டம் 1942 நிறைவேற்றப்பட்டது (1939இலிருந்து பின்னேகலாக).[4] பிரித்தானிய நாடாளுமன்றத்துடனான தனது பிணைப்பை 1986இல் முறித்துக் கொண்டது.
நாட்டின் பெரும்பகுதி பிரான்சிய கட்டளைக்கீழான நிலப்பகுதியாக (பின்னர் ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சியில்) இருந்தன; இவை பிரான்சிடமிருந்து சனவரி 1, 1960 அன்று விடுதலை பெற்றன. பிரித்தானிய கட்டளைப் பகுதியில் இருந்த சிறுபகுதி (தெற்கு கமரூன்கள்) ஐக்கிய இராச்சியத்திடமிருந்து அக்டோபர் 1, 1961இல் விடுதலை பெற்று கமரூனுடன் இணைந்தன.
1 சூலை 1867இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி அரசு தகுதி) பெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 நிறைவேற்றப்பட்டபோது ஏற்கெனவே மேலாட்சி அரசுத் தகுதி பெற்றிருந்த நாடுகளில் கனடா முதலில் இருந்தது.[9] மற்றொரு மேலாட்சிப் பகுதியாக இருந்து வந்த நியூஃபவுண்ட்லாந்து மேலாட்சி மார்ச் 31, 1949இல் இணைந்தது.[10] பிரித்தானிய நாடாளுமன்றப் பிணைப்பை 1982இல் கனடா சட்டம், 1982 மூலம் முறித்துக் கொண்டது.
ஆகஸ்ட் 17, 1960 இல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றது . மூன்றாவது ( மொசாம்பிக் மற்றும் ருவாண்டாவிற்குப் பிறகு ) ஐக்கிய இராச்சியத்துடன் எந்த முன்னாள் காலனித்துவ அல்லது அரசியலமைப்பு தொடர்புகள் இல்லாமல் காமன்வெல்த்தில் அனுமதிக்கப்பட்டது
3 அக்டோபர் 2013 அன்று " நவகாலனித்துவம் " என்று கூறி விலகினார். 2016 ஆம் ஆண்டு காம்பியாவின் அதிபராக அடாமா பாரோ தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 22 ஜனவரி 2018 அன்று பொதுநலவாயத்தில் மீண்டும் இணைவதற்கான விண்ணப்பத்தை அது சமர்ப்பித்தது, மேலும் 8 பிப்ரவரி 2018 அன்று மீண்டும் இணைந்தது
1957இல் மலாயா கூட்டமைப்பாக இணைந்தது; வட போர்னியோ, சரவாக், சிங்கப்பூர் இணைந்த நாடாக செப்டம்பர் 16, 1963இல் மலேசியா என்ற பெயர் மாற்றம் பெற்றது (ஆகத்து 9, 1965இல் சிங்கப்பூர் தனிநாடானது).[20]
ஐக்கிய இராச்சியத்திலிருந்து சூலை 26, 1965இல் விடுதலை பெற்றது.[21] சூலை 9, 1982 முதல் சூலை 20, 1985 வரை பொதுநலவாயத்தின் சிறப்பு உறுப்பினராக இருந்தது.[22]
தென்னாப்பிரிக்காவிடமிருந்து விடுதலை பெற்றது.[25] பெப்ரவரி 28, 1994இல் தென்னாப்பிரிக்காவால் கையளிக்கப்பட்ட வால்விசு பே மற்றும் பெங்குயின் தீவுகளை உள்ளடக்கியது.
சனவரி 31, 1968 இல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கூட்டுப் பொறுப்பாட்சியிலிருந்து விடுதலை பெற்றது. நவம்பர் 1, 1968 முதல் மே 1, 1999 வரை பொதுநலவாயத்தின் சிறப்பு உறுப்பினராக இருந்தது. மே 1, 1999இல் முழுமையான உறுப்பினராக ஏற்றம் பெற்று[26] சனவரி 2006இல் மீளவும் சிறப்பு உறுப்பினரானது.[27] சூன் 2011 முதல் மீண்டும் முழு உறுப்பினர்.[28]
செப்டம்பர் 26, 1907இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி தகுதி) பெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், 1931இன் போது மேலாட்சி தகுதி பெற்றிருந்த நாடுகளில் இதுவும் ஒன்று. இந்தச் சட்டத்தை நியூசிலாந்தின் நாடாளுமன்றம் 1947இல் தான் ஏற்றுக் கொண்டது.[29] பிரித்தானிய நாடாளுமன்றத்துடனான தனது பிணைப்புகளை 1986இல் முறித்துக் கொண்டது.
மே 31, 1961இல் பிரித்தானிய கட்டளைப் பகுதி/பொறுப்பாட்சியில் இருந்த வடக்கு கேமரூன்களை தன்னகப்படுத்தியது. 1995இல் இடைநீக்கம் செய்யப்பட்டது; 1999இல் இடைநீக்கம் விலக்கப்பட்டது.[30]
செப்டம்பர் 8, 1958இல் மஸ்கட் மற்றும் ஓமானிடமிருந்து பெற்ற இக்குவாடர் நகரை உள்ளடக்கியது. 1971 வரை(அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என அறியப்பட்ட) வங்காள தேசத்தை உள்ளடக்கியது.[6] 1972இல் பொதுநலவாயத்திலிருந்து விலகி, 1989இல் மீண்டும் இணைந்தது; 1999இல் இடைநீக்கம் செய்யப்பட்டு 2004இல் இடைநீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது; மீண்டும் 2007இல் இடைநீக்கம் செய்யப்பட்டு[31] 2008இல் நீக்கிக்கொள்ளப்பட்டது.[32]
சூலை 1, 1962இல் பெல்ஜியத்திலிருந்து விடுதலை பெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் குடிமைப்பட்ட பகுதியாகவோ அரசமைப்பின்படி தொடர்புள்ளதாகவோ இல்லாது பொதுநலவாயத்தில் இணைந்த (மொசாம்பிக்கை அடுத்து) இரண்டாவது நாடு.[24]
மே 31, 1910இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி தகுதி) பெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், 1931இன் போது மேலாட்சி தகுதி பெற்றிருந்த நாடுகளில் இதுவும் ஒன்று. மே 31,1961இல் விலகியது; மீளவும் சூன் 1, 1994இல் இணைந்தது.[36]
^ A. வேறுவிதமாகக் குறிப்பிடாவிடில், பொதுநலவாயத்தில் இணைந்த (இரண்டாம் நெடுவரிசையில்) குறிப்பிட்ட நாளில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது. ^ B. பொதுநலவாய நிறுவனத்தின் உறுப்பினரல்ல ^ C. மக்கள்தொகை எண்கள் 2004 மதிப்பீடுகளை ஒட்டியவை. ^ D. மக்கள்தொகை எண்கள் 2005 மதிப்பீடுகளை ஒட்டியவை. ^ E. பாக்கித்தான் தனது விடுதலை நாளை 14 ஆகத்து 1947 அன்று கொண்டாடினாலும் அலுவல்முறையான விடுதலை நள்ளிரவு, 15 ஆகத்து 1947 அன்றே வழங்கப்பட்டது. எனவே, பொதுநலவாயத்தில் இணைந்த நாள் 15 ஆகத்து 1947 ஆகும். ^ F. ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தை ஐக்கிய இராச்சியத்தின் அரசி என்பதைத் தவிர தங்கள் அரசமைப்பின்படி நாட்டுத் தலைவராகக் கொண்ட பொதுநலவாய இராச்சியங்கள்.