மதுரை-திருநெல்வேலி இருப்புப்பாதை தடம் (Madurai–Tirunelveli line) என்பது இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மற்றும் திருநெல்வேலி நகரங்களை இணைக்கும் தொடருந்து தடமாகும். 1 சனவரி 1876 அன்று இப்பாதை பொதுப் பயணத்திற்கு திறந்து வைக்கப்பட்டது.[1] இந்த தொடருந்து பாதை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது 157.1 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. இந்த பாதையானது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி செல்கிறது. இந்த பாதையில் இயங்கும் பெரும்பாலான தொடர் வண்டிகளின் வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆகும்.
வரலாறு
1 சனவரி 1876 அன்று இப்பாதை பயண்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.[2] மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக்கும் பணிகள் 4 ஆகத்து 1981 அன்று நிறைவடைந்தது. இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணி சனவரி 2010-ல் தொடங்கி சனவரி 2015-ல் நிறைவடைந்தது. 3 சனவரி 2015 முதல் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது. இப்பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி ச்அனவரி 2018-ல் தொடங்கி மார்ச் 2023-ல் முடிந்தது.