மலாக்கா பிரித்தானிய முடியாட்சி
மலாக்கா பிரித்தானிய முடியாட்சி (ஆங்கிலம்: Crown Colony of Malacca; மலாய்: Jajahan Mahkota Melaka) என்பது 1946-ஆம் ஆண்டில் இருந்து 1957-ஆம் ஆண்டு வரையில் மலாக்கா மாநிலம், பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் இருந்ததைக் குறிப்பிடுவதாகும். ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கை, 1824-இன் கீழ் மலாக்கா மாநிலம், பிரித்தானிய இறையாண்மையின் கீழ் வந்தது; 1946-ஆம் ஆண்டு வரை நீரிணை குடியேற்றங்களின் ஒரு பகுதியாகவும் இருந்தது.[1] பொதுஇரண்டாம் உலகப் போரின் போது, 1942 முதல் 1945 வரை மலாக்கா பிரித்தானிய முடியாட்சி, ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நீரிணை குடியேற்ற மாநிலங்கள் கலைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பினாங்கு, மலாக்கா முடியாட்சி காலனிகளாக உருவெடுத்தன. மலாயா கூட்டமைப்புக்குள் இருந்த வெளியேறிய சிங்கப்பூர் மட்டும், மலாயா கூட்டமைப்பு அமைப்பில் இருந்து மாறுபட்ட தனியொரு முடியாட்சி காலனியாக மாறியது.[2] துங்கு அப்துல் ரகுமான்1955-ஆம் ஆண்டில், மலாக்காவில் பிரித்தானியர்களின் ஆட்சியின் முடிவு குறித்து விவாதிக்க மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் இலண்டனில் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். பிரித்தானிய முடியாட்சி மலாக்காவை மலாயா ஒன்றியத்துடன் இணைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்குப் பின்னர் மலாயா ஒன்றியம் கலைக்கப்பட்டு மலாயா கூட்டமைப்பு) என அழைக்கப்பட்டது. 31 ஆகஸ்டு 1957-இல், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து மலாயா சுதந்திரம் பெற்றது. பின்னர் மலாயா கூட்டமைப்பிற்குள் ஒரு பகுதியாக மலாக்கா இணைக்கப்பட்டது. அத்துடன் மலாக்காவின் பிரித்தானிய முடியாட்சித் தகுதியும் ஒரு முடிவிற்கு வந்தது. பின்னர் மலேசியா கூட்டமைப்பு உருவானதும் பிரித்தானிய போர்னியோ பிரதேசங்களுடன் மலேசியக் கூட்டமைப்பில் மலாக்கா சேர்க்கப்பட்டது. பிரித்தானிய முடியாட்சி ஆளுநர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia