மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்தியாமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (District Institute of Education and Training -DIET) என்பது இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 1986 இன் பரிந்துரைப்படி ஆசிரியர்களுக்கு பணி முன் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சியை அளிக்கவும் மேம்படுத்தவும் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும்.[1][2] முதன்மைதரமான கல்வி, திறன் மிக்க ஆசிரியர்களின் தேவையும் முதன்மையையும் தேசிய கல்வி ஆணையம் (1964-66) வலியுறுத்தியது. கல்விக் கொள்கை|தேசியக் கல்விக் கொள்கை 1986, தேசிய செயல் திட்டம் 1992 ஆகியவை ஆசிரியர் கல்வியை மேம்படுத்த மாவட்ட அளவில் ஒரு நிறுவனம் ஏற்படுத்துவதன் கட்டாயத்தை வலியுறுத்தியதன் காரணமாக மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.[3] மேலாண்மைஇந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில கல்வியியல், பயிற்சி நிறுவனம் கீழ் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மேலாண்மைய்யை இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் (NCERT) ஒருங்கிணைக்கிறது.[4] செயல்பாடுகள்
தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தொடக்கம்தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 32 மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவை பல்வேறு காலகட்டங்களில் [5] பின்வருமாறு தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 7 துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia