ரவி கருணாநாயக்க
ரவி கருணாநாயக்க என அழைக்கப்படும் ரவீந்திரா சந்திரேசு கருணாநாயக்க (Ravindra Sandresh Karunanayake, நா.உ., பிறப்பு: 19 பெப்ரவரி 1963) இலங்கை அரசியல்வாதியும், பட்டயக் கணக்காளரும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் இவர் நிதியமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். 10வது நாடாளுமன்றம் (1994), 11வது நாடாளுமன்றம் (2000), 12வது நாடாளுமன்றம் (2001), 13வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3] ரவி கருணாநாயக்கா கொள்ளுப்பிட்டி புனித தோமையர் ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார். வாழ்க்கைக் குறிப்பு1291/6, ராஜமல்வத்தை வீதி, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்தவர், மேற்கோள்கள்
உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia