வங்காள சுல்தானகம்
வங்காள சுல்தானகம் (Bengal Sultanate); (Persian: بنگاله Bangālah, Bengali: বাঙ্গালা/বঙ্গালা) and Shahi Bangalah (Persian: شاهی بنگاله சாகி பங்களா, Bengali: শাহী বাঙ্গলা))[1]தில்லி சுல்தான்கள் 14ம் நூற்றாண்டில் பல்வேறு இராச்சியங்களாக சிதறியிருந்த வங்காள பிரதேசங்களை தில்லி சுல்தான்கள் கைப்பற்றி ஒன்றிணைத்தனர். தில்லி சுல்தானகத்தின் ஆளுநர்களாக வங்காள சுல்தான்கள் 1352 முதல் 1576 முடிய ஆண்டனர். பின்னர் முகலாயப் பேரரசு காலத்தில் வங்காள நவாபுகள் வங்காளத்தை ஆண்டனர். வங்காள சுல்தான்கள், பாரசீக நாட்டின் சியா இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். பாரசீக மொழி மற்றும் பண்பாட்டை பின்பற்றுபவர்கள். தெற்காசியாவின் கிழக்கு பகுதியையும், தென்கிழக்காசியாவையும் இணைக்கும் வங்காள சுல்தானகத்தை ஐந்து இசுலாமிய வம்ச சுல்தான்கள் ஆண்டனர். சிட்டகாங் பகுதியில் போர்த்துகேயர்களுக்கு வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவ வங்காள சுல்தான்கள் அனுமதி அளித்தனர்.[2] 1537ல் ஆப்கானிய படைத்தலைவர் சேர் சா சூரி வங்காள நவாபுகளை வென்று வங்காளத்தை கைப்பற்றினார். சேர் சா சூரியின் இறப்பிற்குப் பின்னர் 1576-இல் முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் ராஜ்மகால் போரின் முடிவில் வங்காள சுல்தானகம் முடிவிற்கு வந்தது. வரலாறு1338ல் வங்காளத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தில்லி சுல்தான்கள் இழந்ததைப் பயன்படுத்திக் கொண்ட வங்காள ஆளுநர் சுல்தான் பக்ருத்தீன் முபாரக் ஷா சோனார்கோனிலும், சுல்தான் அலாவூதீன் அலி ஷா லக்நௌட்டியிலும், சுல்தான் சம்சுதீன் இலியாஸ் ஷா சட்கோனிலும் தனித்தனி சுல்தானகங்களை நிறுவி, வங்காளத்தின் பிரதேசங்களை தன்னாட்சியுடன் ஆண்டனர். துருக்கிய இனத்தவரான இலியாஸ் ஷா வம்சத்தினர் வங்காளப் பகுதிகளை 1490 வரை ஆண்டனர். 1494ல் இலியாஸ் ஷா சுல்தான்களின் பிரதம அமைச்சராக இருந்த அலாவுதீன் உசைன் ஷா, வங்காளத்தைக் கைப்பற்றி 1519 வரை ஆண்டார். அலாவுதீன் உசைன் ஷாவின் வழிவந்தவர்கள் வங்காளத்தை 1538 வரை ஆட்சி செய்தனர். அலாவுதீன் உசைன் ஷா வம்சத்தின் வங்காள சுல்தானகத்தில் வங்காளத்தின் கிழக்கில் அரக்கான், அசாம், திரிபுரா மற்றும் தெற்கில் ஒடிசா பகுதிகள் இருந்தன.[3] இச்சுல்தானியர்களின் ஆட்சியின் போது, சிட்டகாங் பகுதியில் போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியினருக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொண்டு, வணிகம் மற்றும் தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆப்கானியப் படைத்தலைவர் சேர் சா சூரி, வங்காளத்தைக் கைப்பற்றினார். பின்னர் 1540ல் முகலாயப் பேரரசர் உமாயுனை வென்று தில்லிப் பேரரசர் ஆனார். செர் ஷா சூரி வங்காளத்தையும், பெசாவரையும் இணைக்கும் 2,500 கி.மீ. நீளமுள்ள பெரும் தலைநெடுஞ்சாலையை அமைத்தார்.[4] பாபர் காலத்தில் வங்காள சுல்தான்களை வென்று, வங்காளத்தை மீண்டும் முகலாயப் பேரரசில் இணைத்தார். முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில், 1576ல் ராஜ்மகால் போரின் முடிவில் வங்காள சுல்தானகம் முடிவிற்கு வந்து, வங்காளம் முகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது.
வங்காள சுல்தான்களின் பட்டியல்இலியாஸ் சாகி வம்சம் (1342-1414)
இராஜா கணேசன் வம்சம் (1414-1435)
மீண்டும் இலியாஸ் சாகி வம்சம் (1435-1487)
ஹப்சி வம்ச ஆட்சியாளர்கள் (1487-1494)
உசைன் சாகி வம்சம் (1494-1538)
பேரரசர் சேர் சா சூரியின் ஆளுநர்கள் (1539-1554)![]()
முகமது ஷா வம்சம் (1554-1564)
கர்ரணி வம்சம் (1564-1576)
இதனையும் காண்க![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வங்காள சுல்தானகம்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia