வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)
வாணி ராணி என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது நடிகை ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பில் ஜனவரி 21, 2013 முதல் திசம்பர் 8, 2018 வரை, திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது. இதே நிறுவனத்தின் தயாரிப்பான செல்லமே என்ற தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பானது. சித்தி, அண்ணாமலை, அரசி தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்த ராதிகா, நான்காவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார், இவருடன் சேர்ந்து வேணு அரவிந்த், பப்லு பிரித்திவிராஜ், நீலிமா ராணி, அருண் குமார் ராஜன் , விக்கி கிரிஷ், மானச் சவளி, நவ்யா, நேஹா, சாந்தி வில்லியம்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] [2][3] இந்தத் தொடர் 2014 முதல் சன் குடும்பம் விருதுகளில் பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பகுதிகளில் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமை இந்தத் தொடரையே சேரும்.இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஜூலை 19, 2021, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00PM–10:30PM வரை மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கியது. கதைச் சுருக்கம்அக்கா தங்கையான வாணி ராணி அண்ணன் தம்பிகளான சாமிநாதன் பூமிநாதனை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணியோ படிப்பு ஏறாத பெண்ணாக அதே சமயம் குடும்ப நிர்வாகத்தில் கெட்டிக்காரியாகவும், அப்பாவியாகவும் இருக்கிறார். கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், இருவருக்கும் புகுந்த வீட்டில் ஒரு சிக்கல் வருகிறது. அந்தச் சிக்கலால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாகி அதன் மூலம் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரே வீட்டில், ஒரே குடும்பமாகவே வாழும், இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் வாணி ராணி தொடரின் கதை. நடிகர்கள்
ராணி குடும்பம்
வாணி குடும்பம்
ஜோதி குடும்பம்
துணை காதாபாத்திரம்
மொழிமாற்றம் & மறுதயாரிப்பு
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia