விந்தியப் பிரதேசம்
![]() விந்தியப் பிரதேசம் (Vindhya Pradesh) (1948 - 1956) மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேச பகுதிகளில், 1948 முதல் 1956 முடிய செயல்பட்ட முன்னாள் மாநிலம் ஆகும். இதன் தலைநகரம் ரேவா ஆகும். இம்மாநிலம் 23,603 சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்தது.[1] இந்தியப் பிரிவினைக்குப் பின் 4 ஏப்ரல் 1948ல், மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர் நிலப்பரப்புகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த 35 சுதேச சமஸ்தானப் பகுதிகளைக் கொண்டு விந்தியப் பிரதேசம் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ரேவா ஆகும். இதன் வடக்கில் உத்தரப் பிரதேசம், தெற்கில் மத்தியப் பிரதேசம் இருந்தது. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் படி, விந்தியப் பிரதேசம், மற்றும் மத்திய பாரதம் மாநிலங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2] ஆட்சி நிர்வாகம்விந்திய பிரதேசம் புந்தேல்கண்ட், பகேல்கண்ட் என இரண்டு கோட்டங்களும், 10 மாவட்டங்களுடன் இருந்தது. கோட்டங்களும் மாவட்டங்களும்நவ்கோன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட புந்தேல்கண்ட் கோட்டத்தின் 6 மாவட்டங்கள்[1]
ரேவாவை தலைமையிடமாகக் கொண்ட பகேல்கண்ட் கோட்டத்தின் நான்கு மாவட்டங்கள்;[1] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia