சத்னா மாவட்டம்
சத்னா மாவட்டம், மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சத்னா ஆகும். இது ரேவா கோட்டத்தில் அமைந்துள்ளது. சத்னா மாவட்டம் 900 சதுர மைல் காட்டுப் பரப்பு கொண்டது. உடையது. இதிகாச வரலாறுமத்தியப் பிரதேச மாநில பந்தல்கண்ட் பகுதியில் சத்னா மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் சித்திரகூடம் ஆகும். இராமாயணம் இதிகாசத்தில் குறிப்பிடப்படும் சித்திரகூடம் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. இராமன் பதினான்கு காடுறை வாழ்வின் போது சீதை மற்றும் இலக்குவன் உடன் சித்திரகூட காட்டுப் பகுதியில் 11 ஆண்டு ஆறு மாதங்கள் கழித்தனர். அத்ரி, அனுசுயா, மார்கண்டேயர், போன்ற முனிவர்கள் சித்திரகூட காட்டில் தவமியற்றியதாக இராமாயணம் குறிப்பிடுகிறது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில்பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சத்னா மாவட்டத்தின் நாகோட் தாலுகாவின் பகுதிகள் நாகோட் சமஸ்தானத்தின் ஆட்சியில் இருந்தது. மாவட்ட நிர்வாகம்சத்னா மாவட்டம் சத்னா, நாகோட், மைகார், ராம்பூர், பகேலான், அமர்பட்டினம், மஜ்காவான், ராம்நகர், உஞ்சேரா, கோடார், வீர்சிங்பூர் என பத்து வருவாய் வட்டங்களைக் கொண்டது. சத்னா மாவட்டத்தில் 2125 கிராமங்களும், 704 பஞ்சாயத்து கிராமங்களும் உள்ளது. பொருளாதாரம்இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாக சத்னா மாவட்டம், இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் 2006-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கும் இந்திய அரசின் நிதி உதவி இம்மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.[1] மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,228,935 2,228,935 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 78.72% மக்களும்; நகரப்புறங்களில் 21.28% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.19% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,157,495 ஆண்களும் மற்றும் 1,071,440 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 926 926 பெண்கள் வீதம் உள்ளனர். 7,502 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 297 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 72.26% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.37 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 62.45 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 330,661 ஆக உள்ளது. [2] சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,158,623 (96.85 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 59,471 (2.67 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. மொழிகள்மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மாவட்ட எல்லைகள் |
Portal di Ensiklopedia Dunia