வேலூர் முள் கத்திரிக்காய்
இதன் இந்திய புவிசார் குறியீட்டின் கீழ், இது "வேலூர் முள் கத்திரிக்காய்" என்று குறிப்பிடப்படுகிறது.[3] பெயர்வேலூர் முள் கத்திரிக்காய் வேலூரின் ஒரு மதிப்புமிக்க, பூர்வீகக் காய்கறி பயிராகும். மேலும் இது வேலூர் எனும் இப்பயிர் விளையும் இடத்தால் பெயரிடப்பட்டது. இந்தக் கத்திரிக்காய் வகைத் தனித்துவமான முட்கள் காரணமாக எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருப்பதால் "முள் கத்தரி" என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் பெயர்இது உள்ளூர் மாநில மொழியான, தமிழ் மொழியில் 'இலவம்பாடி முள் கத்திரி' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் இதன் தோற்றக் கிராமமான இலவம்பாடியைக் குறிக்கிறது. மேலும் முள் என்பது நேரடியாக முட்களைக் குறிக்கின்றது.[4] விளக்கம்வேலூர் முள் கத்திரிக்காய் பற்றிய சில குறிப்புகள்:[5] பண்புகள்
சாகுபடி
சமையல் பயன்கள்
தனித்துவமான அம்சங்கள்
புவிசார் குறியீடுவேலூர் முள் கத்தரி, பிப்ரவரி 22, 2023 அன்று இந்திய அரசின் கீழ் உள்ள புவிசார் குறியீடுகள் பதிவேட்டில் புவிசார் குறியீடு தகுதி பெற்றது. இத்தகுதி 28 அக்டோபர் 2031 வரை செல்லுபடியாகும்.[6] வேலூரைச் சேர்ந்த தென்னிந்தியப் பன்முக மாநில வேளாண் கூட்டுறவுச் சங்கம், வேலூர் முள் கத்திரிக்காயின் புவிசார் குறியீட்டுப் பதிவை முன்மொழிந்தது. அக்டோபர் 2021-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் 2023ஆம் ஆண்டில் கத்திரிக்காய்க்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "வேலூர் முள் கத்திரிக்காய்" என்ற பெயர் இப்பகுதியில் வளர்க்கப்படும் கத்திரிக்காய்க்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் இது தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற முதல் கத்திரிக்காய் வகையாகவும், தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற 46வது பொருளாகவும் ஆனது.[7] புவியியல் குறியீடு கத்திரிக்காயைச் சட்டவிரோத விற்பனை, சந்தைப்படுத்தலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதற்குச் சட்டப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia