2018 சுதந்திரக் கோப்பை (2018 Nidahas Trophy, 2018 நிதாகஸ் கோப்பை, சிங்களம்: 2018 නිදහස් කුසලානය) துடுப்பாட்டபன்னாட்டு இருபது20 (ப20இ)[1] சுற்றுப்போட்டி இலங்கையில் 2018 மார்ச் மாதத்தில் நடைபெற்றது.[2][3] இத்தொடரில் வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றின.[4] ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் இரு தடவைகள் விளையாடின. முதலிரண்டு இடத்தைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.[2] இலங்கையின் 70வது சுதந்திர நாளை இச்சுற்றுப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டது.[5] இச்சுற்றுப்போட்டியின் அனைத்துப் போட்டிகளும் கொழும்புஆர் பிரேமதாச அரங்கத்தில் இடம்பெற்றன.[6] இச்சுற்றுப்போட்டியை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்கவரி நெட்வர்க்சு ஆசியா பசிபிக் நிறுவனத்தின் டி-ஸ்போர்ட் அலைவரிசை வாங்கியது.[7][8]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2018 மார்ச் 6 இல் நடைபெற்ற ஆரம்பப் போட்டி கடும் பாதுகாப்பின் மத்தியில் விளையாடப்பட்டது. அம்பாறை, மற்றும் கண்டியில்முசுலிம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களை அடுத்து நாட்டில் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.[9][10][11]
5வது ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேச அணியை 17 ஓட்டங்களால் வென்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[12] ஆறாவது குழுப் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை 2 இழப்புகளால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[13] 2018 மார்ச் 18 இல் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி வங்காளதேச அணியை 4 இழப்புகளால் வென்று சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.[14]
சகீப் அல் அசன் சுற்றுப்போட்டி ஆரம்பத்தின் முன்னரே வங்காளதேச அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக லித்தன் தாசு விளையாடினார். மகுமுதுல்லா ரியாத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[18] 2018 மார்ச் 10 ஆட்டத்தின் போது "மெதுவான ஆட்டம்" காரணமாக இலங்கைத் தலவர் தினேஸ் சந்திமல் இரண்டு ஆட்டங்களுக்கு விளையாடத் தடை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக திசாரா பெரேரா இலங்கைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[19]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ரோகித் சர்மா (இந்) பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஏழாயிரம் ஓட்டங்களைக் கடந்த பத்தாவது வீரரானார்.[24]
இந்திய அணி ஓட்ட-துரத்தலில் தனது அதிகபட்ச ஓட்டத்தைப் பதிவு செய்தது. இதுவே இறுதிப் போட்டியில் ஒரு அணி ஓட்ட-துரத்தலின் போது எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[14][24]
இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கோப்பையைக் கைப்பற்றியது.
குறிப்புகள்
↑Thisara Perera captained Sri Lanka for their final two round-robin matches in Chandimal's absence.