இந்தோனேசியாவின் புராணம்![]()
இந்தோனேசிய புராணம் (ஆங்கிலம்: Mythology of Indonesia; இந்தோனேசியம் Mitologi Indonesia) என்பது இந்தோனேசிய மக்களின் தோற்றம்; இந்தோனேசிய மக்களின் மூதாதையர் கதைகள்; அவர்களின் நம்பிக்கை அமைப்புகளில் உள்ள ஆவிகள் அல்லது தெய்வங்களைப் பற்றிய கதைகளை விளக்கும் ஒரு முறைமை ஆகும்.[1] இந்தோனேசிய மக்கள் நூற்றுக்கணக்கான இனக் குழுக்களைக் கொண்டவர்கள். ஒவ்வொரு குழுவினரும் தனித்தனியாகச் சொந்த புராணங்களையும்; புனைவுகளையும் கொண்டுள்ளனர். அண்மைய கால்ங்களில் பழைய மரபுகளைப் புதிய வெளியுலகக் கருத்துக்களுடன் இணைத்து ஒத்திசைக்கும் போக்குகள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அவர்களின் பழைய மூதாதையர் புராணங்கள், இந்து தொன்மவியல், இசுலாமிய புராணங்கள் அல்லது கிறித்தவ மரபு புனைவு போன்ற வெளிநாட்டுப் புராணங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டுத் தாக்கங்கள்அண்மைய நூற்றாண்டுகள் வரை, உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சில பூர்வீக இந்தோனேசிய இனக்குழுக்கள், தங்களுக்கென சொந்த பூர்வீகப் புராணங்களையும் தெய்வங்களையும் கொண்டுள்ளனர். அந்தப் பூர்வீகப் புராணங்களில் தோராஜன் மக்கள் (Torajan)[2], நியாஸ் மக்கள் (Nias people), பத்தாக் மக்கள்[3], தயாக்கு மக்கள் மற்றும் பப்புவா நியூ கினி மக்களின் புராணங்கள்; வெளிநாட்டு தாக்கங்களில் இருந்து ஓரளவிற்கு விடுபட்டுள்ளன.[4] இதற்கு நேர்மாறாக, ஜாவானிய மக்கள், பாலி மக்கள்; மற்றும் சுண்டானிய மக்களின் புராணங்கள்[5] , கி.பி 1-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்து தொன்மவியல்-பௌத்த தொன்மவியல்; மற்றும் இந்திய புராணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.[4][6] இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களின் இந்து தெய்வங்கள், புராணக்கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தனித்துவமான உள்ளூர் வடிவத்தில் மாற்றி அமைக்கப்பட்டன.[4] இந்து-பௌத்த புராண மாந்தர்கள்இந்து-பௌத்த புராண மாந்தர்கள் பலரும், சுண்டானிய, ஜாவானிய மற்றும் பாலினிய புராணங்களில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர். இந்து தெய்வங்கள் மற்றும் தேவர்கள், தேவதைகள், அசுரர்கள், அரம்பையர்கள் (Hapsari; Bidadari) என அழைக்கப்படுகிறார்கள். கின்னரர்கள் அந்தப் புராணங்களில் அடங்குவர். செமர் (Semar), தேவி ஸ்ரீ (Dewi Sri) மற்றும் நியாய் ரோரோ கிடுல் (Nyai Roro Kidul) போன்ற இயற்கையின் பூர்வீகத் தெய்வங்கள் அவர்களின் இந்து சகாக்களாக அடையாளம் காணப் படுகிறார்கள்; அல்லது இந்தியாவில் அறியப்படாத ஜாவா-பாலி இந்து ஆலய வழிபாடுகளில் இணைக்கப் படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, அவர்களின் பூர்வீக அரிசி தெய்வமான தேவி ஸ்ரீ; விஷ்ணுவின் சக்தியான இலட்சுமியுடன் அடையாளம் காணப்படுகிறார். செமர் மற்றும் அவரின் மகன்களான புனகவான்கள் (Punakawan) ஜாவானிய ஓயாங் கூலிட் எனும் மரபுவழி கூத்து நிகழ்ச்சிகளில், மகாபாரத பாண்டவர்களின் கோமாளி ஊழியர்களாக இணைக்கப் படுகிறார்கள். இந்தோனேசியர்களின் பல பெயர்கள் தேவர்கள் (Deva), தேவி (Dewi), தேவதா (Dewata) போன்ற தெய்வங்களைக் குறிக்கின்றன. மேலும் அவர்களின் சில பெயர்கள், பூர்வீக மரபுகளில், பத்தாரா (Batara - ஆண் தெய்வம்) மற்றும் பத்தாரி (Batari - பெண் தெய்வம்) என்று குறிப்பிடப்படுகின்றன. இந்தப் பெயர்கள் பூர்வீக பிலிப்பீன்சு புராணமான பத்தாலா (Bathala) மற்றும் திவாதாவை (Diwata) ஒத்தவை ஆகும்.[7] மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia