சிக்கிம் உயர் நீதிமன்றம்
சிக்கிம் உயர் நீதிமன்றம், 1975-ல் சிக்கிம் இந்தியாவின் பகுதியாக இணைந்தபொழுது சிக்கிம் மாநில உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டது. மாநிலத் தலைநகரமான காங்டாக்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். வரலாறுசிக்கிம் உயர் நீதிமன்றம் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயர் நீதிமன்றமாகும். சிக்கிமீல் உயர் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு நீதித்துறை (அதிகாரம் மற்றும் அதிகாரங்கள்) பிரகடனம், 1955-ல் வெளியிடப்பட்டது. சட்டப்பிரிவு 371F இன் பிரிவு (i) இன் கீழ்,சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தேதிக்கு முன் உயர் நீதிமன்றம், நாட்டில் உள்ள மற்ற உயர் நீதிமன்றங்களைப் போலவே அரசியலமைப்பின் கீழ் சிக்கிம் மாநிலத்திற்கான உயர் நீதிமன்றம் செயல்படத் துவங்கியது. இது 1975இல் நிறுவப்பட்டது. நீதிமன்றத்தின் இருக்கை மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரான காங்டாக்கில் உள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற பலத்துடன் செயல்படும் சிக்கிம் உயர்நீதிமன்றம் இந்தியாவின் மிகச்சிறிய உயர்நீதிமன்றமாகும். தலைமை நீதிபதிநீதியரசர் பிசுவநாத் சோமாதார் சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 12 அக்டோபர் 2021 முதல் நியமிக்கப்பட்டார்.[1] தலைமை நீதிபதி பட்டியல்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia