திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரில் அமைந்துள்ளது. அமைவிடம்இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 19.1 கி.மீ தொலைவில் உள்ளது. மூலவர்இத்தலத்தின் மூலவர் சத்தியகிரீசுவரர் ஆவார். இறைவி வேணுவனேஸ்வரி ஆவார். [1] அமைப்புபல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கடுத்துள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச்சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயிலாக உள்ளது.[1] மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சிவன் கோயிலைத் தனியாகச் சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.[2] கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.[1] திருவிழாசித்திரைத் திருவிழா, தைப்பூசம், பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேற்கோள்கள்வெளி இணைப்புகள்இவற்றையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia