திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்
![]() பாலுகந்தநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள் பகுதிக்கு அருகில் திருவாய்பாடி என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். அமைவிடம்கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருஆப்பாடி திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சண்டேசுவரர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சண்டிகேசர் மோட்சம் அடைந்த தலம். தற்போது இத்தலம் திருவாய்பாடி என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் இத்தல ஈசன் ஆப்பாடி உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மிகப்பழமையான கோவில். கம்பீரமான நடராஜர் திருமேனி இங்கு உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 40வது சிவத்தலமாகும்.[2] இறைவன், இறைவிஇத்தலத்திலுள்ள இறைவன் பாலுகந்தநாதர், இறைவி பெரியநாயகி. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia