திருவாவடுதுறை
நிருவாகத் தகவல்மாவட்டம்: மயிலாடுதுறை அமைவிடம்மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. (கிடைக்கோடு 11°2'30"வ நெடுங்கோடு 79°31'16"கி)[4] சமயத் தலங்கள்இங்குள்ள திருவாவடுதுறை ஆதீனம் பிரசித்தி பெற்றது. அருள்மிகு ஒப்பிலாமுலையம்மை உடனுறை மாசிலாமணியீசுரர்[5] (திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவராதலால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்)[6]முதற் பராந்தகன் காலத்திய கல்வெட்டிலிருந்து இக்கோவில் புரட்டாசி விழாவில் ஒருநாளில் திருமூலர் நாடகமும் - ஆரியக் கூத்தும் நடந்து வந்ததாகத் தெரிய வருகிறது. [7] ஊர் சிறப்புதிருவாவடுதுறைக்கு நவகோடி சித்தர்புரம் என்ற ஒரு பெயரும் உண்டு ஒன்பது சித்தர்கள் இவ்விடத்தில் ஒன்பது திசையில் வாழ்ந்ததால் இப்பெயர் வரலாயிற்று. [8] சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையும் உலகப் புகழ் பெற்றதுமான திருமந்திரத்தை திருமூலர் திருவாவடுதுறையிலேயே இயற்றியதோடு அவர் அங்கேயே சமாதிநிலை அடைந்தார்..[9] ஊர்க்கோவிலில் வெள்ளை வேம்பு மரம் காணப்படுகிறது.[10] திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும். [11] ஊரின் பிரபல நபர்கள்நாதசுவர வித்துவான் டி. என். ராஜரத்தினம் பிள்ளை இந்த ஊரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார். அண்மையிலுள்ள நகரங்கள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia