2015 தில்லி சட்டமன்றத் தேர்தல் (Delhi Legislative Assembly election, 2015) 6-ஆவது தில்லி சட்டமன்றத்துக்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 பெப்ரவரி 7 அன்று நடைபெற்றது. 2015 பெப்ரவரி 10 இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[1]
வேட்பாளர்கள்
ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.[2] ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் புது தில்லி தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரசு முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கும்,[3] பின் இரண்டாம் கட்டமாக 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது[4]பாசக 62 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகக் கிரண் பேடியை அறிவித்தது[5]. அவர் கிருஷ்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[6] கிருஷ்ணா நகர் தொகுதி 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாசக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஷ வர்தன் வென்ற தொகுதியாகும். இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை வழிநடத்துபவராக அசய் மக்கானைக் காங்கிரசு தேர்ந்தெடுத்தது.[7]அசய் மக்கான்சதர் பசார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.[8] பாசக முன்னர் வேட்பாளர்களை அறிவித்த இடங்கள் போக மீதி உள்ள எட்டு இடங்களில் நான்கு இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[9] பாசகவின் தோழமைக் கட்சியான அகாலி தளம் மீதி உள்ள நான்கு இடங்களுக்கு போட்டியிட்டது.[10]ராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அகாலி தளம் தனது சொந்த சின்னத்திலும் மற்ற மூன்று தொகுதிகளில் (ஹரி நகர், கால்காஜி, ஷாதரா) பாசக சின்னத்திலும் போட்டியிட்டது. தில்லி காங்கிரசு தலைவர் அர்விந்தர் சிங் லௌலியின் பெயர் காங்கிரசு வெளியிட்ட முதல் பட்டியலில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடவில்லை[11]
தில்லியின் 70 சட்டமன்றங்களை காட்டும் படம்
கட்சித் தாவல்
காங்கிரசு கட்சியின் முன்னாள் தேவ்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான அர்விந்தர் சிங் லௌலி பாசகவில் இணைந்தார். இவரின் தந்தை முன்னாள் நடுவண் வேளாண், உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கிற்கு தொகுதி மறுக்கப்பட்டதாலும் இம்முறை இவருக்கும் தொகுதி மறுக்கப்பட்டது என்பதாலும் இவர் கட்சி மாறியதாக அறிவித்தார்.[12][13] இந்நாள் காந்திநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தில்லி காங்கிரசு கட்சித் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லியுடன் இவரை குழப்பிக்கொள்ள வேண்டாம். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இந்நாளைய லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வினோத் குமார் பென்னி பாசகவில் சேர்ந்தார்.[14][15] காங்கிரசு அரசில் நடுவண் அமைச்சராக இருந்த கிருட்டிண திரத் பாசகவில் சேர்ந்தார்.[16]
அரவிந்த் கெஜ்ரிவால் 31,583 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். கிரண் பேடி 2277 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார் , அசய் மக்கான் தன் தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். குடியரசு தலைவரின் மகள் சர்மிசுதா முகர்ச்சி கிரேட்டர் கைலாசு தொகுதியில் 6,102 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். நசஃப்கட் தொகுதியில் லோக் தளம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பகுசன் சமாச் கட்சியின் வாக்குகள் 2013 தேர்தலில் 5.44 % ஆக இருந்தது இத்தேர்தலில் 1.3% ஆக குறைந்துவிட்டது. இக்கட்சி தில்லியின் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது.[35] அசய் மக்கான் உட்பட காங்கிரசின் 62 வேட்பாளர்கள் பிணை தொகையை இழந்தனர். 15% வாக்குகள் பெற்றால் மட்டுமே பிணையை திரும்ப பெறமுடியும்.[36] 2015 பிப்பரவரி 13ஆம் தேதி தில்லியின் எட்டாவது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.[37] இவர் எந்த துறையையும் தனக்கு எடுத்துக்கொள்ளவில்லை.[38][39]பட்பட்கஞ்சு தொகுதியில் வென்ற மனிசு சிசோடியா துணை முதல்வராகவும் நிதி, வருவாய், சேவை, திட்டம், மின்சாரம், கல்வி, தகவல் தொழிற்னுட்பம், நிருவாக சீர்திருத்தம், நகர்புற வளர்ச்சி, லஞ்ச ஒழிப்பு, நிலம் & கட்டங்கள் துறைகளையும் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்காத துறைகளையும் கவனிப்பார். பாபர்பூர் தொகுதியில் வென்ற கோபால் ராய் அவர்கள் வளர்ச்சி, தொழிலாளர் நலன், போக்குவரத்து, பொது நிருவாகம் போன்ற துறைகளை கவனிப்பார். சகூர் பசுதி தொகுதியில் வென்ற சத்யேந்தர் செயின் மின்சாரம், நலம், தொழில், குருத்துவாரா மேலாண்மை, பாசனம் & வெள்ளம், பொதுப்பணித் துறை போன்ற துறைகளை கவனிப்பார். திரிநகர் தொகுதியில் வென்ற சிதேந்தர் சிங் உள்துறை, சட்டம், நீதி, சுற்றுலா, கலை & பண்பாடு போன்ற துறைகளை கவனிப்பார். மட்டியா மகல் தொகுதியில் வென்ற ஆசிம் அகமது கான் உணவு & பகிர்தல், வனம், தேர்தல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளை கவனிப்பார். சுல்தான்பூர் மாச்ரா தொகுதியில் வென்ற சந்தீப் குமார் நலம், பெண்கள் & குழந்தைகள், மொழி, தாழ்த்ப்பட்டோர் & பழங்குடியினர் போன்ற துறைகளை கவனிப்பார்.[39]