பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம்![]() ![]() ![]() ![]() பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம் (Bactria–Margiana Archaeological Complex (சுருக்கமாக: BMAC), இப்பண்பாடு ஆமூ தாரியா எனும் ஆக்சஸ் ஆற்றின் கரையில் பிறப்பிடமாகக் கொண்டதால் இதனை ஆக்சஸ் நாகரிகம் (Oxus civilization) என்றும் அழைப்பர். இப்பண்பாட்டின் காலம் ஏறத்தாழ கிமு 2,250 - கிமு 1,700 இடைப்பட்ட காலம் ஆகும்.[1][2] [1][3] ஆக்சஸ் நாகரீகம் என அறியப்படும் பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம் என்பது நடு ஆசியாவில் செப்புக் கால நாகரீகம் பற்றிய நவீன தொல்லியல் ஆய்வு நிலையாகும். கிமு. 2,200 - 1,700 களில் இன்றைய துருக்மேனிஸ்தான், வடக்கு ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெக்கிஸ்தான், மேற்கு தஜிகிஸ்தான், ஆகியவற்றுடன் மேல் ஆமூ தாரியா ஆற்றை மையப்படுத்திய நிலப்பரப்பே அன்றைய பாக்திரியாவாக இருந்தது. ஆக்சஸ் பண்பாடு ஆமூ தாரியா ஆற்றின் மேல் பகுதியில் உள்ள தற்கால துருக்மேனிஸ்தானின் பாக்திரியா மற்றும் மார்கியானா பகுதிகளில் செழித்திருந்தது.[4] [5]இப்பகுதியில் தான் சொராட்டிரிய நெறியை தோன்றியது. வடக்கு ஆப்கானித்தானில் அமைந்த பாக்திரியா எனும் தற்கால பல்கு மற்றும் தற்கால துருக்மேனிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள மார்கியானா எனும் தற்கால மெர்வி நகரத்தின் பாக்திரியா-மார்க்கியானா தொல்லியல் வளாகங்களை சோவியத் ஒன்றியத்தின் தொல்லியலாளர் விக்டர் சாரியாநிதி என்பவரால் 1976 இல் கண்டறியப்பட்டன.[6][7][8].[9][10][11][12] ![]() ![]() பண்பாடு![]() வேளாண்மை மற்றும் பொருளாதாரம்பாக்திரியா-மார்கியானா பகுதிகளில் வாழ்ந்த மகக்ள் நீர்பாசான வசதிகளுடன் கோதுமை மற்றும் பார்லி வேளாண்மை செய்தனர். இம்மக்களின் நினைவுச் சின்ன கட்டிடக்கலை, வெண்கல கருவிகள், மட்பாண்டங்கள் மற்றும் சிறிது தரம் குறைந்த நவரத்தினக் கற்களின் நகைகள் இவர்களின் நாகரித்தின் அடையாள உள்ளது. பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம், ஆப்கானித்தான் நாட்டின் தென்கிழக்கில் அமைந்த கந்தகார் மாகாணத்தில் உள்ள முண்டிகாக் தொல்லியல் களம், கிழக்கு ஈரானில் உள்ள சாகர்-இ சுக்தே[13]மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா, மொகெஞ்சதாரோ தொல்லியல் களகளுடன் ஒப்பிடப்படுகிறது.[14] கிமு 3,000 இல் இருந்து பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகத்தின் இரு சக்கர வண்டிகளின் மாதிரிகள் தஜிகிஸ்தான் நாட்டின் ஆல்டின்-தேபே தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது. மத்திய ஆசியாவின் வண்டிச் சக்கர போக்குவரத்திற்கு இது ஆரம்ப சான்றுகள் ஆகும். இருப்பினும் மாதிரி சக்கரங்கள் சற்றே முன்னதாகவே சூழல்களில் இருந்து வந்தன. இப்பகுதியில் வண்டிகள் துவகக்த்தில் எருதுகள் அல்லது ஒரு காளையால் இழுக்கப்பட்டன. இருப்பினும் ஒட்டகங்களும் வளர்க்கப்பட்டன. ஒரு ஒட்டகத்தின் சித்திரம் கிமு 2200 ஆல்டின்-தேபே தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[15] கலைகள்செப்புக் காலத்திய பாக்திரியா-மார்கியானா வளாகத்தில் கிமு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, செழிமையை உணர்த்தும் பாக்திரியாவின் இளவரசி எனும் பெயர் கொண்ட சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட பெண் தெய்வத்தின் சிறபம் கண்டெடுக்கப்பட்டது.[16]
கட்டிடக் கலைமார்கியானா பகுதியின் தலைநகரான கோனூர் நகரம் விளங்கியது என்று தொல்லியல் அறிஞர் சாரியானிடி கருதுகிறார். வடக்கு கோனூரின் அரண்மனை 150 மீட்டர் நீளம் மற்றும் 140 மீட்டர் அகலமும், டோகோலோக் கோவில் 140 மீட்டர், 100 மீட்டர் அகலமும், கெல்லேலி கோட்டை 3,125 மீட்டர் நீளமும், 125 மீட்டர் அகலமும், அட்ஜி குய் மாளிகை 25 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் கொணடது. இம்மாளிகை உள்ளூர் ஆட்சியாளர் வீடு ஆகும். [17] கோனூர் மற்றும் டோகோலோக் போன்ற பிஎம்ஏசி வலுவூட்டப்பட்ட குடியிருப்புகள் வரலாற்று காலத்தில் இந்த பிராந்தியத்தில் அறியப்பட்ட கோட்டை வகையை ஒத்திருப்பதாக மல்லோரி எனும் தொல்லியல் அறிஞர் சுட்டிக்காட்டுகிறார். அவை வட்டமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்கலாம் மற்றும் மூன்று சுற்றுச் சுவர்களைக் கொண்டிருக்கலாம். கோட்டைகளுக்குள் குடியிருப்பு குடியிருப்புகள், பட்டறைகள் மற்றும் கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.[18] பிஎம்ஏசி கலாச்சாரத்தின் மக்கள் வெண்கலம், தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களைக் கொண்டு சிற்ப வேலைகள் மற்றும் கருவிகள் செய்வதில் மிகவும் திறமையானவர்கள். இவ்வளாகத்தில் காணப்படும் பல உலோகக் கலைப்பொருட்கள் மூலம் இது சான்றளிக்கப்படுகிறது பிற பண்பாட்டாளர்களுடன் அறிமுகம்பிஎம்ஏசி (BMAC) தொல்லியல் களங்களின் தொல்பொருட்கள், சிந்துவெளி தொல்லியல் களங்கள், ஈரானிய மேட்டு நிலம் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[17]பிஎம்ஏசி தளங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் மூலம், இப்பகுதியினர் சிந்து சமவெளின் ஹரப்பா மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் ஈலாம் நாட்டவர்களுடன் செய்து கொண்ட வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான மேலதிக ஆதாரங்களை வழங்குகின்றன. ஈலாம் பகுதியின் கோனூர் மலையில் கிடைத்த உருளை முத்திரையும், ஹரப்பாவின் சிந்துவெளியின் வரிவடிவங்களுடன் கூடிய யானை சிற்பமும், இரண்டு நாகரிகங்களின் தொடர்பை வலியுறுத்துகிறது.[19] மெசொப்பொத்தேமியாவின் அல்தின்-தேப் தொல்லியல் களத்தில் கிடைத்த ஹரப்பாவின் யானை தந்தங்களும், முத்திரைகளும் சிந்துவெளி களத்தின் நாகரித்தின் தொடர்பை வலியுறுததுகிறது. ஆப்கானித்தானின் வடக்கில் ஆமூ தாரியா ஆற்றின் கரையில் உள்ள சார்டுகாய் தொல்லியல் களம், நடு ஆசியாவிற்கும், பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கிற்கும்]] இடையே அமைந்த ஒரு பெரிய வணிக மையமாக விளங்கியது.[20] யுரேசியப் புல்வெளி பகுதியினர்களுக்கும், பிஎம்ஏசி பகுதி மக்களுக்கும் கிமு 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் தொடர்புகள் இருந்தது. ஆமூ தாரியா ஆற்றின் நீர் ஏரல் கடலில் கலப்பதற்கு முன்னர், அன்ட்ரோனோவோ பண்பாட்டு மக்கள் வாய்கால்கள் அமைத்து, ஆமூ தாரியா நீரை வேளாண்மைக்குப் பயன்ப்டுத்தினர். கிமு 1,900 காலகட்டத்தில் பிஎம்ஏசி பண்பாட்டு மக்கள் உயரமான சுற்றுச் சுவர்களுடன் கட்டிடங்கள் கட்டுவது குறைந்தது. இப்பகுதியின் பாலைவனச்சோலைகள் ஒவ்வொன்றும் தனக்கென தனி பாணியிலான மட்பாண்டங்கள் மற்றும் தொல் பொருட்கள் கொண்டிருந்தது. பாக்திரியா-மார்கியானாவின் நாட்டுப்புறகளில் கிடைத்த வாய் அகன்ற மட்பாண்டங்கள் போன்றே, அன்ட்ரோனேவோவில் கிடைத்த மட்பாண்டங்கள் இருந்தது. இந்தோ-ஈரானியர்களுடன் உறவுகள்ஆதி இந்தோ-ஐரோப்பியர்களிடமிருந்து பிரிந்த ஒரு முக்கிய மொழியின் கிளையான இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை (ஆரியர்கள்) தேடுவோருக்கான தகுதியாக பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம் கவனத்தை ஈர்க்கிறது. தென்மேற்கு ஈரானில் இருந்து இடம்பெயர்ந்ததன் விளைவாக இந்த வளாகத்தை இந்தோ-ஈரானியனாக அடையாளம் காணுமாறு சாரியானிடி எனும் தொல்லியல் அறிஞர் வலியுறுத்துகிறார். பாக்த்ரியா – மார்கியானா வளாகத்தின் தொல்பொருட்கள் வடமேற்கு ஈரானில் உள்ள சூசா, ஷாஹத் மற்றும் தேபே யாஹ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்ட்ரோனோவோ கலாச்சாரத்திலிருந்து அதன் இறுதி கட்டத்தில் இந்தோ-ஈரானிய பேச்சாளர்களால் ஊடுருவி, ஒரு கலப்பினத்தை உருவாக்கினர். இந்த கண்ணோட்டத்தில் ஆதி-இந்தோ-ஆரியர், இந்திய துணைக்கண்டத்திற்கு தெற்கே செல்வதற்கு முன்பு கலப்பு கலாச்சாரத்திற்குள் வளர்ந்தனர். [17] ஆண்ட்ரோனோவோ, பிஎம்ஏசி மற்றும் யாஸ் பண்பாடுகள் பெரும்பாலும் இந்திய-ஈரானிய இடம்பெயர்வுடன் தொடர்புடையவை என ஜேம்ஸ் பி. மல்லோரி கீழ் கண்டவாறு விவரிக்கிறார். யுரேசியாவின் தெற்கு புல்வெளியில் இருந்து ஈரானியர்கள் மற்றும் இந்திய-ஆரியர்களின் வரலாற்று இடங்களுக்குள், இந்திய-ஈரானிய இடம்பெயர்வுக்காக ஒருவர் வாதிட விரும்பினால், இந்த புல்வெளி கலாச்சாரங்கள் மத்திய ஆசிய நகர்ப்புறத்தின் ஒரு சவ்வு வழியாக மாற்றியமைக்கப்பட்டன என்பது தெளிவாகிறது. வழக்கமான ஸ்டெப்பி பொருட்கள் பிஎம்ஏசி தளங்களில் காணப்படுகின்றன, மற்றும் ஊடுருவும் பிஎம்ஏசி பொருள் தெற்கே ஈரான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் காணப்பட்டது. பிஎம்ஏசி-இன் அடி மூலக்கூறுகள் இந்தோ-ஈரானியர்களிடம் இருப்பதற்கான சான்றுகள்மைக்கேல் விட்செல் மற்றும் அலெக்சாண்டர் லுபோட்ஸ்கி கூற்றுகளி படி, ஆதி இந்தோ-ஈரானிய மொழியில் முன்மொழியப்பட்ட அடி மூலக்கூறுகள் பிம்ஏசி நாகரிகத்தில் உள்ளது. இது பிஎம்ஏசியின் அசல் மொழியைக் கொண்டு அடையாளம் காண முடியும். மேலும், லுபோட்ஸ்கி கூற்று படி, அதிக எண்ணிக்கையிலான சொற்களை ஒரே மொழியிலிருந்து கடன் வாங்கியதை சுட்டிக்காட்டுகிறார். அவை இந்தோ-ஆரிய மொழியில் மட்டுமே சான்றளிக்கப்பட்டுள்ளன, எனவே வேத சமஸ்கிருதத்தில் ஒரு அடி மூலக்கூறுக்கான சான்றுகள். இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள் அநேகமாக தெற்கு-மத்திய ஆசியாவின் இயக்கத்தின் முன்னணியை உருவாக்கியுள்ளதாகவும், ஈரானில் நுழைந்த பல பிஎம்ஏசி கடன் வார்த்தைகள் இந்தோ-ஆரியன் மூலம் மத்தியஸ்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் முன்மொழிவதன் மூலம் அவர் இதை விளக்குகிறார். [21]:306[22] மைக்கேல் விட்செல் கூற்றின் படி, கடன் வாங்கிய சொற்களஞ்சியத்தில் விவசாயம், கிராமம் மற்றும் நகர வாழ்க்கை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், சடங்கு மற்றும் மதம் ஆகியவை அடங்கும். எனவே நகர்ப்புற நாகரிக உலகில் இந்தோ-ஈரானிய மொழி பேசுபவர்களின் பழக்கத்திற்கு ஆதாரங்களை வழங்குகிறது.[22] குதிரைகள்பிஎம்ஏசி வளாகத்தின் கோனூர் தொல்லியல் நகரத்தின் கல்லறை எண் 3200 இல் நடந்த அகழ்வாராய்ச்சியில், கிமு 2,200 ஆண்டின் முதல் காலகட்டத்திய குதிரை எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.[23] தொல்பொருள் ஆய்வாளர் ஜூலியோ பெண்டசு-சர்மியெண்டோ மற்றும் என். ஏ. துபோவாவின் (2015) கட்டுரையைப் பற்றி குறிப்பிடுகையில், "வெண்கல பட்டைகளால் சுற்றப்பட்ட சக்கரங்கள்" மற்றும் குதிரையும் வண்டியும் சிந்தாஷ்டா கலாச்சாரத்தின் ஒத்த அடக்கங்களுக்கு "ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தையவை" என்று கருதுகிறார்.[24] குதிரை சேணம் கொண்ட ஒரு கல் சிலை, ராயல் நெக்ரோபோலிஸில் புதைக்கப்பட்ட எண் 3210 இல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் புதைக்கப்பட்டதில் ஒரு குதிரையின் உடலின் பாகங்கள கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் களங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia