மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பகுதிகளில் பேசப்படும் தமிழ் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்றழைக்கப்படுகிறது. இலங்கையில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழ் வழக்குகளில் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் இப்பிரதேசத்திற்கே உரிய வட்டார வழக்குகள் கொண்டு தனி ஒரு பேச்சு வழக்காகத் திகழ்கிறது. மட்டக்களப்பு பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் மற்றும் இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, மலையகப் பிரதேசங்களில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழில் இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுக் காணப்படுகிறது. மட்டக்களப்புப் பேச்சுத் தமிழானது மட்டக்களப்புத் தமிழகத்திற்கு உரியதாயினும் நகர மற்றும் கிராமங்களில் தன்னகத்தே சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றது. கல்வி, அபிவிருத்தி, பிற சமூகத்தினருடனான தொடர்புகள் என்பன இதற்குக் காரணம் எனலாம். முஸ்லிம்கள் சமூகத்தை அண்டிய பிரதேசத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் முஸ்லிம்களின் பேச்சுத் தமிழிலுள்ள சொற்களைக் கொண்டதாகவும், கிராமங்களில் பண்டைய தமிழ்ச் சொற்கள் மாறாமலும், நகரத்திலுள்ள பேச்சு வழக்கில் ஆங்கில சொற்களின் பாவனை அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள். மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், போர்த்துக்கல் பரங்கியர், கரையோர வேடர்கள் ஆகியோரிடையே பேசப்படுகின்றது. திருகோணமலை பேச்சு வழக்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை ஒத்துக் காணப்படுகிறது.[1] ஆயினும், திருகோணமலை பேச்சு வழக்கு மட்டக்களப்பு பேச்சு வழக்குடன் நில அமைவு போன்ற காரணங்களினால் நெருங்கிய தொடர்புடையது. கமில் சுவெலபில் என்ற மொழியியலாளரின் கருத்துப்படி மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ், பேசப்படும் எல்லா தமிழ் வழக்குகளிலும் அதிகம் இலக்கியத் தன்மை வாய்ந்ததாகவுள்ளது. இது சில பழைய பண்புகள் பாதுகாக்கின்றது. சில கவர்ச்சியூட்டும் மாறுதல்களை மேம்படுத்துகையில் தமிழின் ஏனைய வழக்குகளைவிட இது உண்மைத் தன்மையான இலக்கிய விதிமுறையைத் தக்க வைத்துள்ளது. அத்துடன் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் சில மிகவும் குறிப்பிட்ட சொற்களஞ்சிய பண்புகளைக் கொண்டு, அதன் ஒலியியல் தனிக்கூறு தொடர்பால் ஏனைய இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகளுடன் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை தனக்கே உரித்தான சில சொற்களையும் கொண்டுள்ளது.[2][3] அத்துடன், மட்டக்களப்புத் தமிழர்கள் பேசும் தமிழ் வடமொழிக்கலப்பு மிகவும் குறைவாகவுள்ளமை, மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படல் இதன் மற்றுமொரு சிறப்புக் காரணம்.[4] பெயர்க் காரணம்மட்டக்களப்பு என்பது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தைக் குறிப்பதாயினும். மட்டக்களப்பு என்பது மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் எல்லையில் அமைந்துள்ள வெருகல் கங்கையிலிருந்து, அம்பாறை மாவட்டத்தின் எல்லையாகிய குமுக்கன் ஆறு வரையுமான பரந்த பகுதி மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டது.[5][6] எனவே "மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்" என்பது தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசுவோரின் தமிழ்ப் பேச்சு வழக்காகும். உச்சரிப்புஎழுத்து![]() மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் சில எழுத்துகள் மாறி உச்சரிப்புக்குள்ளாகின்றன. அவை தனிச் சொற்களாகவும் பல சொற்களாகவும் மாறி ஒலிக்கின்றன.[5] ‘ன’கரமும், ‘ற’கரமும் தொடர்ந்து வரும் சொற்கள் முறையே ‘ண’கரமும் ‘ட’கரமுமாக உச்சரிக்கப்படுகின்றன.
ஐகாரம் உள்ள சொற்கள் அகரமாக ஒலித்தல்:
ஐகாரத்தை அடுத்த தகார ஒலி சகரமாகவும் மேலும் ஐகாரம் எகரமாகவும் ஒலித்தல்:
‘ஏன்’ எனும் விகுதி ‘அன்’ ஆக மாறி மிகுந்து ஒலித்தல்.
ழகர ஒலி ளகரமாக ஒலித்தல்.
மெல்லின மெய்யீறு குற்று கரம் ஏற்றல்
ஏகார உயிர் ‘ஆ’, ‘ஓ’ என மாறி ஒலித்தல்
லகர மெய்யான ஈற்றோசை குறைந்து ஒலித்தல்
அதிக திரிபுடன்
சொற்கள்சில சொற்கள் குறிலாகவும் நெடிலாகவும் மாறுபட்டு மட்டக்களப்புத் தமிழ் உச்சரிப்பில் ஒலிக்கின்றன. சில திரிபுபட்டும், பழந்தமிழ் தொடர்பு கொண்டும், இலக்கிய ஆட்சி முறைக்கு ஏற்பவும் உச்சரிக்கப்படுகின்றன. அவ்வாறான சில பொதுவழக்காற்றுச் சொற்கள் உதாரணங்களுடன் இங்கே தரப்பட்டுள்ளது.[5]
பழமொழிகள்மட்டக்களப்பு மாநிலத்தில் பாவிக்கப்படும் பழமொழிகளிலும் அப்பிரதேசத்திற்குரிய தமிழ்ப் பேச்சு வழக்கு காணப்படுகின்றது. சில பழமொழிகள் அப்பிரதேசத்திற்கே உரித்தான தனித்துவம் வாய்ந்தவை. உதாரணத்திற்குச் சில பழமொழிகள்:[7]
பழந்தமிழ்ச் சொற்கள்கிழக்கிலங்கையின் வரலாறு கி.மு. 5ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து அது சங்க கால தமிழ் நாட்டு மக்களுடன் நெருங்கிய தொடர் கொண்டிருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். அத்தொடர்பானது பேச்சு வழக்கில் தற்போதும் காணப்படுவது சிறப்பம்சம்.[5][8] தொல்காப்பியர் காலச் சொற்கள் இன்றும் கிராமப்புற பேச்சு வழக்கில் காணப்படுகிறது. கா, அதர், குடி, மருங்கு, மறுகா, கரப்பு, அரவம், செக்கல், யாமம், கடுவன் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
இன்றும் கிராமப்புறங்களில் “கா” அசைச் சொல் மரியாதையாக வயதானவரை அல்லது தமக்கு நெருக்கமானவரை அழைக்கப் பயன்படுகிறது. “என்னகா பாடு?” என்பது ‘எப்படிச் சுகம்?’ என்று வினவ பாவிக்கப்படுகிறது. தமிழ் நாட்டுடன் தொடர்புபட்ட சொற்கள்இலங்கையிலுள்ள தமிழ் பேச்சு வழக்குகளுக்கு அப்பால் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் தமிழ் நாட்டின் ஒருசில பேச்சு வழக்குகளால் தாக்கம் பெறுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துவது மதுரைத் தமிழ் ஆகும். மதுரைப் பேச்சு வழக்கிலுள்ள தனித்துவமான சொற்கள் இங்கேயும் பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சில எடுத்துக்காட்டுகள்:[9]
உறவுமுறைச் சொற்கள்ஈழத்தின் பலவிடங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கிலுள்ள சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலும் பாரிய மாறுதலற்றுக் காணப்படுகின்றது.
தற்காலத்தில் அப்பாவை அப்பா என்றும், அம்மாவை அம்மா என்றும் அழைக்கிறார்கள். அச் சொற்கள் முறையே அப்பு அல்லது ஐயா, ஆச்சி என முன்பு அழைத்தனர். பெற்றோரின் பெற்றோரை இன்று அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, என அழைக்கப்படுகிறார்கள். முன்பு இவர்கள் பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என அழைக்கப்பட்டனர். பெற்றோரின் உடன் பிறந்ததோர் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி என தற்போது அழைக்கப்படுகின்றனர். முன்பு இவர்கள் பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, பெரியையா, சின்னையா என அழைக்கப்பட்டனர். அக்காவின் கணவரை அத்தான் என்றும், தங்கையின் கணவரை மச்சான் என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் அல்லது அண்ணி என்றும், மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது மனைவி கணவனை ‘இஞ்சேருங்க' (யாழ்ப்பாணம்: 'இஞ்சாருங்கோப்பா') என்று அழைத்து வந்தனர். மனைவி கணவனையும், கணவன் மனைவியும் 'அப்பா' என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது. தற்போது அனேகமாக கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது. மட்டக்களப்புச் சொல் வேறுபாடுபிறபகுதிகளிலிருந்து மட்டக்களப்புப் பேச்சுத் தமிழை வேறுபடுத்திக் காட்டும் சில சொற்கள் உள்ளன. அச்சொற்களைக் கொண்டே குறிப்பிட்ட நபர் எப்பகுதிப் பேச்சுத் தமிழ் பேசுகிறார் என அடையாளம் கண்டுகொள்ள முடியும். சில சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழுக்கு உரியனவாகவும், சில யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழுக்கு உரியனவாகவும் காணப்படுகின்றன. அப்படியான சொற்கள் சில அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
இலக்கணம்தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள்மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்களில் பாரிய வேறுபாடுகள் இல்லாதன. யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் காணப்படும் முன்னிலைச் சுட்டுச் சொற்களான உவன், உவள், உது, உவை, உவடம், உங்கை, உந்தா ஆகிய சொற்கள் அற்றவை. இதைக் கொண்டே எப்பகுதி தமிழ் பேசுகின்றனர் என்பதை அடையாளம் காண முடியும். தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் அட்டவணை:
வேற்றுமை உருபுகள்இப்பபகுதி பேச்சுத்தமிழில் வேற்றுமை உருபுகள் சேரும்போது எழுத்துத் தமிழிலிருந்து வேறுபடுகிறது. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழை அண்மித்தும் இப்பகுதிக்குரிய ஒலிப்பைப் பெற்று வேறுபட்டுக் காணப்படுகிறது.
இடம், பால், காலம்இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் வேறுபடும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழுடன் சில வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகிறது.
வினைச் சொற்களின் பயன்பாடுகள்யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் காணப்பட, மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் மூன்று வகையான பேச்சு வகைகள் காணப்படுகின்றன. மரியாதை மிகு பேச்சு வகை, சாதாரண பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என காணப்படும் இவற்றில், யாழ்ப்பாண வழக்கில் காணப்படும் இடைநிலை பேச்சு வகை இல்லை. ஆனாலும் இந்த இடைநிலை பேச்சு வகை மட்டக்களப்பு வழக்கிலும் தற்போது சிறிதளவு காணப்படுகிறது. வடக்கிற்கும் கிழக்கிற்குமான தொடர்பு இதற்கான காரணமாக இருக்கலாம். பலவேளைகளில் மரியாதை மிகு பேச்சு வகையுடம் சாதாரண பேச்சு வகை அல்லது மரியாதை அற்ற பேச்சு என இரு வகையான பேச்சு வகைகள் மாத்திரம் காணப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. மரியாதை மிகு பேச்சு வகையே பாரியளவு பாவனையில் உள்ளது. இவ்வாறு பேசுவது நாகரீகப் பண்பாகக் கருதபப்டுகிறது. ஆயினும் கிராமப்புறங்களில் இதற்கு விதிவிலக்குகளும் உள. மட்டக்களப்புப் பேச்சுத் வழக்கிற்கும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிற்கும் சிறியளவு வேறுபாடு காணப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்னவெனில், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் காணப்படும் மாத்திரையளவு மட்டக்களப்புப் பேச்சுத் வழக்கில் குறைந்து ஒலிக்கும்.
சுட்டுப்பெயர் சொற்களும் இரண்டு வகையான பேச்சு வழக்கை மாத்திரம் கொண்டுள்ளன.
பிறமொழிச் சொற்கள்போத்துக்கேய, டச்சு, ஆங்கில மற்றும் அரபு ஆகிய மொழிகளின் செல்வாக்கு மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் கலந்து காணப்படுகின்றன. போத்துக்கேய, டச்சு, ஆங்கில ஆட்சிகள் இப்பிரதேசங்களில் காணப்பட்மை மற்றும் போத்துக்கேய, அராபிய வாரிசுகள் இப்பிரதேசங்களில் கலந்திருப்பது என்பன இப்பகுதித் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதற்கான முக்கிய காரணம் எனலாம். போத்துக்கேய மொழிச் சொற்கள்போத்துக்கேய மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]
டச்சு மொழிச் சொற்கள்டச்சு மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]
ஆங்கில மொழிச் சொற்கள்ஆங்கில மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]
அரபு மொழிச் சொற்கள்அரபு மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]
வேறு மொழிச் சொற்கள்போத்துக்கேய, டச்சு, ஆங்கில மற்றும் அரபு ஆகிய மொழிகளைத் தவிர பாரசீக மொழி, ஹிந்தி, உருது மொழிகளின் தாக்கமும் உள்ளது. இவை பேச்சுத் தமிழில் மிகக் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளதாயினும், தமிழ் நாட்டுடன் உள்ள தொடர்கள் இப்பகுதியில் அச்சொற்கள் பற்றிய விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. சில சொற்கள் பின்வருமாறு:
இந்துஸ்தானி மொழிச் சொற்கள்
ஹிந்தி மொழிச் சொற்கள்
சமகாலப் போக்குபழந்தமிழ்ச் சொற்கள் மற்றும் வடமொழிச் சொற்கள் அரிதாகக் காணப்படுவதற்கு மட்டக்களப்புத் தமிழகம் பிறபகுதி மக்களுடன் தொடர்படாமைதான் காரணங்களில் ஒன்று எனக்கூறப்படுகிறது.[10] உலகமயமாதல் பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கையில் மொழியும் பல தாக்கங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கு மட்டக்களப்புப் பேச்சுத் தமிழும் விலக்கல்ல. இப்பகுதித் தமிழுக்கு உள்ள தனித்துவம் காக்கப்படுவது கிராமங்களிளன்றி நகரங்களிலல்ல. பேராசிரியர் கமில் சுவெலபில் அவர்களின் மொழியியல் ஆய்வு அறுபதுகளில் வெளியானது.[1][10] பல தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்பேச்சு வழக்கு புறத்தாக்கங்களுக்கு உள்ளாவதை தவிர்க்கவும் முடியாது. உதாரணமாக; கிராமப்புறங்களில் காணப்படும் “கா”அசைச் சொல் சேர்ந்த பேச்சு (என்னகா பாடு?) இன்று நாகரீகமற்ற ‘கிராமத்துப் பேச்சு’ எனப் பார்க்கப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் எனும் நூலின் சிறப்புரையில் மட்டக்களப்புப் பேச்சு வழக்கின் இன்றைய நிலை பற்றிக் குறிப்பிடுவதனைக் காணலாம்.[8] அங்கு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றிய நூல்கள்
இந்நூல்களில் அதிகமானவை ஈழத்துப் பூராடனாரால் எழுதப்பட்டன. இவ்வாசிரியரின் பிறநூல்களிலும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றிய விடயங்கள் அல்லது அதை அறிந்து கொள்வதற்கான விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக 'மட்டக்களப்பியல்', 'மீன்பாடும் தேன்நாடு', 'மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை' ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.[11][12][13] மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia