விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்![]() தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. சிஐஎஸ்-ஏ2கே அமைப்புடன் இணைந்து செயல்பட்டு இந்நிகழ்வு நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துவதற்கான திட்டப் பக்கம் இதுவாகும். உரையாடல்களைப் பேச்சுப் பக்கத்தில் நடத்தலாம். முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிகழ்வு
நிகழ்ச்சி நிரல்
முக்கிய நாட்கள்
நிகழ்வில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு
நிகழ்வில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள்
கலந்துகொள்பவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்1. மதிப்பூதியம் - சொந்த ஊரிலிருந்து தஞ்சாவூர் சென்று திரும்புவதற்கான பயணக் கட்டணம், சொந்த ஊரிலும் தஞ்சாவூரிலும் உள்ளூர் போக்குவரத்துக்கான செலவுகள், நிகழ்வன்று இரவுணவிற்கான செலவு.
2. தங்குவதற்கான அறை வசதி - செப்டம்பர் 23 (சனிக்கிழமை) மாலை முதல் செப்டம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை. 3. உணவு வசதி - நிகழ்வன்று காலைச் சிற்றுண்டி, பகலுணவு, காலை நேரத்து நொறுவை, மாலை நேரத்து நொறுவை. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்
செய்தித் தொகுப்புஅறிக்கைநிகழ்வில் கலந்துகொள்ள 38 பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில் 29 பேர் கலந்துகொண்டனர். வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்வில் விக்கிப்பீடியா, பொதுவகம், விக்கித்தரவு, விக்சனரி, விக்கிமூலம் ஆகிய திட்டங்கள் குறித்து சுருக்கமான அறிமுகம் தரப்பட்டது. பயனர்கள் மற்ற திட்டங்கள் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த அறிமுகங்கள் அமைந்திருந்தன. "திரும்பிப் பார்ப்போம்" எனும் தலைப்பின்கீழ், தமிழ் மொழியில் இயங்கும் விக்கிமீடியா திட்டங்களில் நீண்ட காலமாக பங்களித்து வரும் பயனர்கள் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, அண்மையில் பங்களித்துவரும் பயனர்களும், புதிய பயனர்களும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஒரு சுருக்கமான கலந்துரையாடல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்கள் என்ற வகையில் மூன்று பிரிவில் ஆறு பயனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் இலக்கியம், வரலாறு, தொல்லியல் நோக்கில் தஞ்சாவூரைப் பற்றி உரையாற்றினார். சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக, தமிழ் விக்கிப்பீடியாவின் இருபதாண்டுகளைக் கொண்டாடும்விதமாக தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அணிச்சல் வெட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒன்றுகூடி அமர்ந்து, ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து நண்பகல் விருந்தில் அனைவரும் கலந்துகொண்டனர். பிற்பகலில் நடைபெற்ற கலைப்பயணத்தில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், தர்பார் அரங்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அனைவரும் பார்வையிட்டனர். அதன்பிறகு, அங்கிருந்து அவரவரின் இல்லங்களுக்கு பயணங்களை மேற்கொண்டனர். Report(This section is added for the benefit of non Tamil speaking members of CIS) Out of 38 selected applicants, 29 Tamil Wikipedians participated in the event. The event was started with welcoming address, followed by brief introduction about Wikipedia, Wikimedia Commons, Wikidata, Wiktionary and Wikisource. This was to help the participants to understand projects running under Wikimedia movement. A programme with a title “looking back” was formally presented by long-time contributors of Tamil Wikipedia and other Tamil language wiki projects. After this, users who are contributing in recent years and new users shared their experience. An informal short discussion about development plans for next 5 years was one of the agenda in the event. Following this programme, 6 users were honoured with memento for their significant contributions. The chief guest, Tamil scholar Dr. Mani Maran delivered a speech on literature, history and archaeology related to Thanjavur. The chief guest was honoured with memento by Tamil Wikipedians. Towards the end, Tamil Wikipedians celebrated 20 years of Tamil Wikipedia by a cake-cutting. Group photos were taken to register the memorable event. All participants enjoyed a feast. Site visit was started after the lunch. Participants visited the Thanjavur palace which comprises Saraswathi Mahal Library, Art Gallery and Durbar Hall. In the evening, Tamil Wikipedians started their journey to return home. |
Portal di Ensiklopedia Dunia