விஜயலட்சுமி ரவீந்திரநாத்
விஜயலட்சுமி ரவிந்திரநாத் (Vijayalakshmi Ravindranath, பிறப்பு: அக்டோபர் 18, 1953) ஒரு இந்திய நரம்பணுவியலாளர் ஆவார். இவர் தற்போது, பெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தில் நரம்பியல் மையத்தின் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் குர்கான் (2000-9) தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார். அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஆராய்ச்சியே இவரது முக்கிய பங்களிப்பாகும்.[1][2] கல்வி மற்றும் தொழில்விஜயலட்சுமி இளங்கலை அறிவியல், முதுகலை அறிவியல் பட்டத்தை ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் முடித்தார், மேலும் அவர் உயிர்வேதியியலில் முனைவர் பட்டத்தை மைசூர் பல்கலைக்கழகத்தில் பெற்றார். 1981 லிருந்து அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவர் பெங்களூரில் உள்ள மனநல சுகாதார மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் மனித மூளை வளர்சிதை மாற்றத்தை ஆய்வு செய்தார். குறிப்பாக உளப்பிணி மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.[3] 1999 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள தேசிய நுண்ணறிவு ஆராய்ச்சிக் குழு (NBRC), இந்தியாவில் பிணைய நரம்பியல் ஆராய்ச்சிக் குழுக்களுக்கு ஒருங்கிணைத்து, டி.பி.டீ யின் சுயநிர்ணய நிறுவனம் ஒன்றை அமைப்பதற்காக, இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் திணைக்களம் அமைக்க உதவினார்.[4] விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்இந்திய அகாடமி ஆஃப் சயின்ஸ் , தேசிய அகாடமி ஆஃப் சயின்ஸ் , இந்திய தேசிய விஞ்ஞான அகாடமி மற்றும் மருத்துவ அறிவியல் தேசிய அகாடமி போன்ற பல அகாடமிகளுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,[5] இந்திய நரம்பியல் அகாதமி மற்றும் மூன்றாம் உலக அறிவியல் அகாதமி ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரில் விஜயலட்சுமியும் ஒருவர் ஆவார்.[6]
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia