விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா 2010 ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்.[1] இத்திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் மேனன்.[2] சிலம்பரசன், த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் (இப்படத்திற்குப் பின் இவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்படுகிறார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[4] இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.[5] 7 வருடங்களின் பின் கௌதம் மேனன் இத்திரைப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் சிலம்பரசன் அடங்கலாக 6 நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறினார். கதைச்சுருக்கம்விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிறிஸ்தவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.[6] நடிப்பு
பாடல்கள்
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது.[8] இத்திரைப்படத்தின் உலகளாவிய இசை வெளியிட்டு விழா டிசம்பர் 19, 2009 அன்று லண்டனில் நடந்தது. அதன் பின் மீண்டுமொரு முறை சென்னையில் ஜனவரி 12, 2010 அன்று நடந்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia