அருள் மைந்தன் மாகாதை
அருள் மைந்தன் மாகாதை என்னும் கிறித்தவக் காப்பியத்தை பொன் தினகரன் என்பவர் இயற்றியுள்ளார். இந்நூல் இயேசுவின் பிறப்பு முதல், அவர் உயிர்பெற்றெழுந்து சீடர்களுக்குக் காட்சி நல்கும் நிகழ்ச்சி வரையான வரலாற்றைக் கூறுகிறது. நூல் பிரிவுகள்இக்காப்பியத்தில் திருப்பிறப்புக் காண்டம், அருட்பணிக் காண்டம், மீட்புக் காண்டம் என்று மூன்று காண்டங்கள் உள்ளன. முப்பது உட்பிரிவுகளும் 330 பாடல்களும் நூலில் அடங்கும். திருக்குறளும் விவிலியமும்இயேசுவின் வரலாற்றைப் பாடுகின்ற இக்காப்பியத்தில் நூலாசிரியர் திருக்குறள் பாக்களின் கருத்துகளையும் இணைக்கின்றார்.
என்று திருக்குறள் மணம் கமழ எடுத்துரைக்கின்றார்.
ஆதாரம்இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006). |
Portal di Ensiklopedia Dunia