புதிய சாசனம் (நூல்)புதிய சாசனம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை அருள்திரு வின்சென்ட் சின்னதுரை என்னும் கத்தோலிக்க குரு ஆக்கியுள்ளார். புதுக்கவிதை நடையில் ஆக்கப்பட்ட இக்காப்பியம் 2002ஆம் ஆண்டு வெளிவந்தது. நூல் பிரிவுகள்இக்காப்பியம் இயேசுவின் வரலாற்றைக் கூறுகின்ற நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வானதூதர் செக்கரியா என்னும் யூத குருவுக்குத் தோன்றி இறைத் திட்டத்தை அறிவித்த நிகழ்ச்சி தொடங்கி இயேசு விண்ணேறிச் சென்ற நிகழ்ச்சி வரை இக்காப்பியத்தில் பாடப்பட்டுள்ளன. நூலின் 10 இயல்களில் 122 பாடல்கள் அடங்கியுள்ளன. ஆசிரியர்இக்காப்பியத்தின் ஆசிரியர் தமிழக அரசின் சிறுபான்மைக் குழுத் தலைவராகவும் சென்னையில் அமைந்துள்ள சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் இயக்குநராகவும் செயல்பட்டிருக்கிறார். தற்போது அகில இந்திய கத்தோலிக்க திருச்சபையின் பொதுநிலையினர் குழுவின் செயலராகப் பணியாற்றுகின்றார். பாடல்கள் சிலஅன்னை மரியாவின் சிறப்பைக் கூறும்போது ஆசிரியர்,
என்று பாடுகிறார். மனித குலத்தின் மீட்புக்காக இயேசு சிலுவையில் கொடிய மரணத்தைச் சந்தித்த காட்சி:
ஆதாரம்இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006). |
Portal di Ensiklopedia Dunia