ஆவுடையார்கோயில் வட்டம்
இந்த வட்டத்தின் கீழ் பொன்பெத்தி, மீமிசல், ஏம்பல், ஆவுடையார்கோயில் என 4 உள்வட்டங்களும், 96 வருவாய் கிராமங்களும் உள்ளன.[5] மேலும் இவ்வட்டடத்தில் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. சிறப்புகள்இவ்வட்டத்தில் மாணிக்கவாசகர் சீரமைத்த, தேவாரப் பாடல் பெற்ற ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் சிவத்தலம் உள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 87,250 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 43,759 ஆண்களும், 43,491 பெண்களும் உள்ளனர். 21,356 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.07% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9196 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,389 41 மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.58%, இசுலாமியர்கள் 12.5%, கிறித்தவர்கள் 9.84% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia