இசுமாயில் சப்ரி யாகோப்
டத்தோ ஸ்ரீ இசுமாயில் சப்ரி பின் யாகோப் (மலாய்: Ismail Sabri Yaakob; ஆங்கிலம்: Ismail Sabri Yaakob; சீனம்: 依斯迈沙比里; பிறப்பு 18 ஜனவரி 1960); என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மலேசியாவின் 9-ஆவது பிரதமரும் ஆவார். மலேசியாவின் 8-ஆவது பிரதமர் முகிதீன் யாசின்க்குப் பதிலாக மலேசியாவின் 9-ஆவது பிரதமராகப் பதவி ஏற்றார். 2021 ஆகஸ்டு 21-ஆம் தேதி, மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர். பொதுஅம்னோ கட்சியின் உதவித் தலைவரான இவர் ஜூலை 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை 13-ஆவது மலேசிய துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். பெரிக்காத்தான் நேசனல் எனும் தேசிய கூட்டணியின் நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சராக மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் தலமையில் பணியாற்றினார். 40 நாட்கள் மட்டுமே பணியாற்றியதன் மூலம் மலேசிய அரசியல் வரலாற்றில் குறுகிய காலம் பணியாற்றிய மலேசிய துணைப் பிரதமர் என்றும் அறியப் படுகிறார். 2004-ஆம் ஆண்டில் இருந்து பெரா தொகுதியின் நாடாளுமன்ற் உறுப்பினராகவும் சேபவை செய்து வருகிறார்.[1]. மலேசியாவின் 9-ஆவது பிரதமர்19 ஆகத்து 2021 அன்று மலேசியாவின் 9-ஆவது பிரதமராக அம்னோ கட்சித் உதவித் தலைவர் இசுமாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி ஆதரவு நல்கியதை அந்நாட்டு முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் கூறினார்.[2].[3]21 ஆகத்து 2021 அன்று முகிதீன் யாசின்ற்கு பதிலாக மலேசியாவின் 9வது பிரதமராக மாமனார் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia