மகாதீர் முகமது
மகாதீர் முகமது (ஆங்கிலம்: Mahathir Mohamad, சீனம்: 马哈迪·莫哈末; பிறப்பு: 10 சூலை 1925)[2] மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.[3] இவர் லங்காவி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946-ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட அம்னோ கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016-ஆம் ஆண்டில் இவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சியைத் தொடங்கினார்.[4][5] 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.[6][7] 24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பொதுஇவரின் பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.[8] மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.[9]. கெடா, அலோர் ஸ்டார் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அம்னோ கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுடன் ஏற்பட்ட சர்ச்சை[10] காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். பிரதமர் பதவிதுங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976-ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981-இல் பிரதமர் உசேன் ஓன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-ஆவது பிரதமராகத் தெரிவானார். 1 ஆகஸ்டு 2023 அன்று, இருதய சிகிச்சைக்காக மகாதீர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டா.[11][12][13] மலேசிய அரசியல் நெருக்கடி 2020-202224 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் தம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வேளையில், ஆளும் நம்பிக்கை கூட்டணியிலிருந்து 26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிபிபிஎம் விலகியது. மேலும், நீதிக்கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கூட்டணியைத் தாங்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்தனர். இதனால், நம்பிக்கை கூட்டணி அரசு கவிழ்ந்தது. மாநில அளவில், பக்காத்தான் அரப்பான் அரசு ஜொகூர், மலாக்கா, பேராக், கெடா ஆகிய மாநிலங்களிலும் கவிழ்ந்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia