இந்திய அரசுச் சட்டம், 1909
இந்திய அரசுச் சட்டம், 1909 (Government of India Act 1909) அல்லது இந்திய கவுன்சில் சட்டம், 1909 (Indian Councils Act of 1909) என்பது 1909ல் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. வங்காளப் பிரிவினையால் இந்தியர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தவும், இந்திய புரட்சி இயக்கங்களின் ஆதரவைக் குறைக்கவும், இந்தியர்களுக்கு சில உரிமைகளை வழங்க வேண்டுமென்று காலனிய அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரைகளை இந்தியத் துறைச் செயலர் ஜான் மார்லே மற்றும் இந்திய வைசுராய் மிண்டோ பிரபு ஆகியோர் வழங்கினர். எனவே இவை “மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்” எனவும் வழங்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசின் இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்கும் கோரிக்கையை காலனியாளர்கள் ஏற்கவில்லை. மாறாக காலனிய நிருவாக முறையில் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க சில வழிவகைகள் செய்யப்பட்டன. இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்திய கவுன்சில் சட்டம், 1909 இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மேற்கோள்கள்
ஆதாரங்கள்Ilbert, Courtenay (1911). "The Indian Councils Act, 1909". Journal of the Society of Comparative Legislation 11 (2): 243–254. பன்னாட்டுத் தர தொடர் எண்:1479-5973. https://www.jstor.org/stable/752520. |
Portal di Ensiklopedia Dunia