இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)
இளவரசி என்பது சன் தொலைக்காட்சியில் சனவரி 19, 2010 முதல் நவம்பர் 1, 2014 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி, 1263 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் தயாரிக்க, சந்தோஷி, ஸ்ரீகர், ரச்சித்தா மகாலட்சுமி, சுபலேகா சுதாகர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் நடித்துள்ளார்கள். கதை சுருக்கம்ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்த்த இளவரசி (சந்தோஷி) என்ற இளம் பெண் அவளது கடின உழைப்பின் மூலம் எதிர்பாராத பலதடைகளையும் தாண்டி தனது குடும்பத்தையும் மற்றும் தனது திருமண வழக்கையும் பல சவால்களுக்கு மத்தியில் எப்படி பயணித்தாள் என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
தயாரிப்புஇந்த தொடர் ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் தயாரித்தார். இந்த தொடருக்கு முதலில் புருஷ லட்சணம் என்று பெயரிடப்பட்டு சுசி பாலா மற்றும் மனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு முதன்மை புகைப்படமும் எடுக்கப்பட்டது. பின்னர் சில பிரச்சனை காரணமாக தொடரின் பெயர் இளவரசி என்று பெயர் மாற்றம் பெற்று நடிகை சந்தோஷி என்பவர் கதாநாயகியாக நடித்தார். மொழி மாற்றம்இந்த தொடர் தெலுங்கு யில் 'ஈஸ்வரி' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 12 ஜூலை 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia