கங்காதர் ராவ்
மகாராஜா கங்காதர் ராவ் நெவல்கர் (Maharaja Gangadhar Rao Newalkar)மராத்தியப் பேரரசின் அடிமையாக இருந்த வட இந்தியாவில் அமைந்துள்ள ஜான்சியின் 5 வது அரசராவார். இவர் சிவராவ் பாவின் மகனும், ரகுநாத் ஹரி நெவல்கரின் (மராத்திய ஆட்சியின் கீழ் ஜான்சியின் முதல் ஆளுநராகவும் இருந்தார்) வம்சாவளியாக இருந்தார். வம்சாவளிகங்காதர் ராவின் மூதாதையர்கள் மகாராட்டிராவின் இரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பேஷ்வா ஆட்சி தொடங்கி பேஷ்வா மற்றும் ஓல்கர் படைகளில் முக்கியமான பதவிகளை வகித்தபோது அவர்களில் சிலர் காந்தேஷுக்கு சென்றனர். ரகுநாத் ஹரி நெவல்கர் புந்தேல்கண்டில் மராட்டிய அரசியலை வலுப்படுத்தினார். இருப்பினும் அவருக்கு வயதாகும்போது, ஜான்சியின் ஆட்சியை தனது தம்பி சிவ் ராவ் பாவிடம் ஒப்படைத்தார். 1838 இல் மூன்றாம் ரகுநாத் ராவ் இறந்தபோது, பிரித்தானிய ஆட்சியாளர்கள் அவரது சகோதரர் கங்காதர் ராவை 1843 இல் ஜான்சியின் அரசராக ஏற்றுக்கொண்டனர். நிர்வாகிகங்காதர் ராவ் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார். மேலும் இவர் ஜான்சியின் நிதி நிலையை மேம்படுத்தினார். ஜான்சி இவரது முன்னோடி ஆட்சியின் போது மோசமான நிலையில் இருந்தது. ஜான்சி நகரத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய இவர் சரியான நடவடிக்கைகளை எடுத்தார். இவர் சுமார் 5,000 வீரர்கள் கொண்ட ஒரு இராணுவத்தை வைத்திருந்தார். இவர் ஞானம், இராஜதந்திரம் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை விரும்பினார். ஆங்கிலேயர்கள் கூட இவரது குணங்களால் ஈர்க்கப்பட்டனர். கங்காதர் ராவ் கணிசமான ஈடுபாடு மற்றும் சில புலமைப்பரிசில்களைக் கொண்டிருந்தார். இவர் சமசுகிருத கையெழுத்துப் பிரதிகளின் சிறந்த நூலகத்தை சேகரித்து ஜான்சி நகரத்தின் கட்டிடக்கலைகளை வளப்படுத்தினார். திருமணம்மே 1842 இல், கங்காதர் ராவ் மணிகர்னிகா என்ற இளம் பெண்ணை மணந்தார். இவர் லட்சுமிபாய் என்று பெயர் மாற்றப்பட்டார். பின்னர் ஜான்சியின் ராணியாகி 1857 எழுச்சியின் போது ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். கங்காதர் ராவ் தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தனது உறவினர் வாசுதேவ் நெவல்கரின் மகன் ஆனந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பெயரிட்டர். தத்தெடுப்பு பிரித்தானிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது அவர் தனது மகனை கருணையுடன் நடத்த வேண்டும் என்றும் ஜான்சி அரசாங்கம் தனது விதவைக்கு அவரது வாழ்நாள் முழுவதற்கும் மான்யம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி அரசரிடம் கடிதம் வழங்கப்பட்டது. நவம்பர் 1853 இல் அரசரின் மரணத்திற்குப் பிறகு, இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹளசி பிரபுவின் கீழ் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், அவகாசியிலிக் கொள்கை பயன்படுத்தியது. தாமோதர் ராவின் கோரிக்கையை நிராகரித்து, மாநிலத்தை அதன் பிரதேசங்களுடன் இணைத்தது. மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia