கல்வராயன்மலை வட்டம்
கல்வராயன் மலை வட்டம் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்ட போது 14 நவம்பர் 2019 அன்று புதிதாக இவ்வருவாய் வட்டம் நிறுவப்பட்டது.[1][2] [3][4] கல்வராயன்மலை வட்டம், கல்வராயன் ஊராட்சி ஒன்றியத்தின் 15 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[5] இப்புதிய வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கல்வராயன் மலை ஆகும். புவியியல்கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த கல்வராயன்மலை வட்டம் 550.7 சதுர கிலோமீட்டர்கள் (212.6 sq mi) பரப்பளவு கொண்டது. இதன் வடகிழக்கில் சங்கராபுரம் வட்டம், தென்கிழக்கில் சின்னசேலம் வட்டம் அமைந்துள்ளது.[6]இதன் தெற்கிலும், மேற்கிலும் சேலம் மாவட்டத்தின் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உள்ளது.[7] இதன் வடமேற்கில் தருமபுரி மாவட்டத்தின் அரூர் வட்டம் உள்ளது.[8] மற்றும் வடக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தண்டராம்பட்டு வட்டம் உள்ளது.[9] இவ்வட்டத்தில் மணி முத்தா ஆறுகள் மற்றும் கோமுகி ஆறு பாய்கிறது.[10] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 550.7 சதுர கிலோமீட்டர்கள் (212.6 sq mi) பரப்பளவு கொண்ட இவ்வட்டத்தின் மக்கள் தொகை 41,025 ஆகும்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia