கைலாசு சத்தியார்த்தி
கைலாசு சத்யார்த்தி (பிறப்பு 11 சனவரி 1954) இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன், (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000ற்கு மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.[3] 2014ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு மலாலா யூசப்சையி உடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.[4] பிறப்புகைலாசு சத்யார்த்தி 1954-ஆம் ஆண்டில், மத்தியப்பிரதேச மாநிலத்தில், விதிஷா நகரத்தில் பிறந்தார். இவர் தந்தை காவல்துறையில் காவலராக இருந்தவர். அவர் கைலாசு சிறுவயதாக உள்ள போதே மரணமடைந்து விட்டார்.[1] இளம்பருவம் தமிழ் இல்கைலாசு சத்யார்த்தி தனது 11ஆவது வயதிலேயே, தன்னுடைய நண்பர் குழுவுடன், நூல் வங்கி ஒன்றைத் தொடங்கினார். மின்பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். 1980இல், தனது பணியை விட்டு விலகி, தன் நண்பர்களின் உதவியோடு, தனது தொண்டு நிறுவனத்தை துவங்கினார். இளம் வயதில் தான் பள்ளிக்குச் செல்லும் போது தன் வயதுடைய பையன் தன்னை ஏக்கத்துடன் உற்றுப் பார்த்ததைக் கவனித்த சத்தியார்த்தி அப்பையனின் தந்தையான காலணி தைப்பவரிடம் அவர் மகன் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டதற்குத் தாங்கள் உழைக்க மட்டும் பிறந்தவர்கள் என்று அவர் கூறிய பதில் தன்னை வெகுவாகப் பாதித்ததாகவும், ஏழை குழந்தைகளுக்காக தான் உழைக்க ஆரம்பத்ததில் அந்நிகழ்ச்சியின் பங்கு பெரிது என்றும் கூறினார்.[5] இளம்பருவத்தில் சில விருந்தினர்களை அழைத்திருந்தார். அவர்கள் உணவைச் சமைத்தது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அறிந்ததால் உணவு உட்கொள்ளாமல் இடையிலேயே சென்று விட்டனர். அந்நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டு தன் குடும்பப் பெயரான சர்மா என்பதை விடுத்து சத்தியார்த்தி என்பதை அதற்குப் பதில் சூட்டிக்கொண்டார்.[5] பணிசிறுவர்களின் சமூகச் சிக்கல்களுக்காக உலகளவில் சத்தியார்த்தி போராடினார். சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான உலகளாவிய அணிவகுப்பில் (Global March Against Child Labor) பங்கேற்றார்.[6] உலகளவிலான தன்னார்வல அமைப்புகள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டணியான இதன் பன்னாட்டு பரிந்துரைப்பு சிறுவர் தொழிலாளர் மற்றும் கல்விக்கான அமைப்பான பன்னாட்டு மையத்தில் (ICCLE)[7] இணைந்து பணியாற்றினார். தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ரக்மார்க்கு என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார். (இது தற்போது குட் வீவ் எனப்படுகிறது). பின்னர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க 1980களிலும் 1990களிலும் பரப்புரை ஆற்றினார். சமூக அக்கறையுள்ள நுகர்வுக்கும் வணிகத்திற்குமான விழிப்புணர்வுக்காகப் போராடினார். இந்த இயக்கத்தின் தாக்கத்தாலும் வெற்றியாலும் உலகளவில் தயாரிப்பு மற்றும் வழங்கல் துறைகளில் மேம்பாடு ஏற்பட்டது. சத்தியார்த்தி புது தில்லியில் வாழ்கிறார். இவருடன் மனைவி, மகள், மகன் மற்றும் மருமகன் வாழ்ந்து வருகின்றனர். தன்னால் காப்பாற்றப்பட்ட சிறுவர்களையும் தனது குடும்பத்தில் ஒருவராகப் பேணி வருகிறார். விருதுகள்சத்தியார்த்தியை பலதரப்பட்ட குறும்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு திரைப்படங்கள் இவரின் சேவையான குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையை முன்னிலைப்படுத்தின. இவர்தம் சீரியப் பணிக்கு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கைலாசு சத்தியார்த்தி |
Portal di Ensiklopedia Dunia