கோபாலகிருஷ்ணன் நாகப்பன்
கோபாலகிருஷ்ணன் நாகப்பன் அல்லது நா. கோபாலகிருஷ்ணன் (ஆங்கிலம்: Gobalakrishnan Nagapan அல்லது N. Gobalakrishnan; மலாய்: Gobalakrishnan Nagapan; சீனம்: 哥巴拉克里斯南·纳加班) (பிறப்பு: 23 மார்ச் 1960) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 2008 முதல் 2013 வரை மலேசியா கெடா மாநிலத்தின் பாடாங் செராய் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] 2008-ஆம் ஆண்டு, பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) (பிகேஆர்) உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2011-ஆம் ஆண்டில் மக்கள் நீதிக் கட்சியில் இருந்து வெளியேறி தன்னை ஒரு சுயேச்சையாக அறிவித்துக் கொண்டார்.[2] இருப்பினும் 2017 மே 8-ஆம் தேதி மலேசிய இந்திய காங்கிரசு (மஇகா) கட்சியில் சேர்ந்தார்.[3] தனிப்பட்ட வாழ்க்கைகோபாலகிருஷ்ணன் நாகப்பன், 1960-ஆம் ஆண்டில் பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். முன்னாள் மலேசிய தடகள வீராங்கனையான (Former Malaysian National Athlete) வசந்தி ராமலிங்கம் (Vasanthi Ramalingam) என்பவரை மணந்த இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[4] சர்ச்சைசெப்டம்பர் 2009-இல், மலேசியக் காவல்துறை அதிகாரி ஒருவரைப் பணி செய்வதில் இருந்து தடுத்து நிறுத்தியதற்தாகக் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.[5] அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு RM 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.[6] டிசம்பர் 2010-இல், பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராகீமிற்கு எதிராகப் பேசினார். அன்வர் இப்ராகீம் தன் மகள் நூருல் இசா அன்வாருக்கு (Nurul Izzah Anwar) தனிச்சலுகை காட்டுவதாகக் கோபாலகிருஷ்ணன் கருத்துரைத்தார்.[7] 2011 சனவரி மாதம் அவர் மக்கள் நீதிக் கட்சியில் இருந்து விலகி ஒரு சுயேச்சையாகச் செயல்பட்டார். அத்துடன் அரசு சாரா ஓர் அமைப்பை உருவாக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.[8] மலேசியப் பொதுத் தேர்தல் 20182013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக அவர் பாடாங் செராய் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். ஏற்கனவே அவர் பாரிசான் நேசனல் கூட்டணியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்து இருந்தார். இருப்பினும் அவருடையை கோரிக்கையை பாரிசான் நேசனல் கூட்டணி நிராகரித்து விட்டது. எந்த ஒரு கட்சியின் சார்புநிலை இல்லாமல் 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். அவர் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையையும் இழந்தார்.[9][10] நீதிமன்ற வழக்குஏப்ரல் 2019-இல், வழக்கறிஞரும்; மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் (Malaysian Bar) முன்னாள் தலைவருமான மஞ்சீத் சிங் தில்லான் (Manjeet Singh Dhillon) என்பவரை அவதூறு செய்ததற்காக RM 150,000 இழப்பீடாகவும், RM 5,000 செலவாகவும் வழங்க வேண்டும் என்று புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[11] தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia