கோயில் நான்மணிமாலைகோயில் நான்மணிமாலை [1] என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை வகையில் அமைந்த ஒரு நூலாகும். இது சிதம்பரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பாகப் பாடப்பட்ட ஒரு நூல். சிதம்பரம் கோயில் பொதுவாகக் கோயில் என்று வழங்கப்படுவது ஆகையால் இந்நூலின் பெயரும் "கோயில் நான்மணிமாலை" என வழங்குகிறது. நான்மணிமாலையின் இலக்கணத்துக்கு அமைய இந்நூல், வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்கு பாவகைகளில் மாறி மாறி வரும் 40 பாடல்களைக் கொண்டு அந்தாதியாக அமைந்துள்ளது. இந்த இலக்கிய வகையில் அமைந்த முதல் நூல் இதுவே ஆகும்[2]. இதனை இயற்றியவர் பட்டணத்துப் பிள்ளையார் எனப்படும் பட்டினத்தடிகள் ஆவார். இந்நூல், நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. கருப்பொருள்இந் நூலில் நான்கு வகைக் கருப்பொருட்கள் அமைந்திருக்கக் காணலாம். இவை:
என்பவை ஆகும்[3]. பாடல் நடை
குறிப்புகள்
உசாத்துணைகள்
வெளியிணைப்புக்கள்
|
Portal di Ensiklopedia Dunia