சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
சிவசக்தி மூவி மேக்கர்ஸ் (Sivasakthi Movie Makers) என்பது ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது சிவசக்தி பாண்டியன் தலைமையில் இயங்குகிது. இந்த நிறுவனம் 1990 களில் தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது, ஆனால் திரைப்பட தயாரிப்பு எண்ணியல் தொழில் நுட்பத்திற்கு மாறியதைத் தொடர்ந்து நிறுவனம் தேங்கத்தைக் கண்டது. இந்நிறுவனமானது பதினொரு படங்களை உருவாக்கியுள்ளது, இவை அனைத்திற்கும் தேவா இசையமைத்துள்ளார்.[1] வரலாறுதிரைப்பட விநியோகஸ்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சிவசக்தி பாண்டியன் இறுதியில் தயாரிப்புக்கு நகர்ந்தார். முத்து (1995) பட விநியோகத்தின் மூலம் பெற்ற லாபத்தைக் கொண்டு அஜீத் நடித்து அகதியன் இயக்கிய தனது முதல் படமான வான்மதி (1996) படத்தை தயாரித்தார்.[2][3] வான்மதி வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து வான்மதியின் நடிகர், இயக்குநர், படக்குழுவினரைக் கொண்டே காதல் கோட்டை (1996) படத்தை பாண்டியன் தயாரித்தார். காதல்கோட்டை மிக்ப்பெரிய வெற்றிப் படமாக ஆனது. படம் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் அகத்தியன் தான் பாதி முடித்துள்ள படமான உன் நினைவாக படத்தின் கதையை திருடி காதல் கோட்டை (1996) படத்தை இயக்கியுள்ளதாக, இயக்குநர் ஆர். பாலு கூறினார். பாலுவை சமாதானப்படுத்த, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவருக்கு தன் நிறுவனத்தில் ஒரு படத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கினார்.[4] பாலு பின்னர் காலமெல்லாம் காதல் வாழ்க (1997) என்ற காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், இதில் முரளி, புதுமுகம் கௌசல்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியான பாராட்டை பாலு பெற்றனர்.[5] முரளி பின்னர் பல வெற்றிப் படங்கள் நடிக்க காரணமாக இந்த வாய்ப்பை வழங்கிய நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.[6] 2000 ஆம் ஆண்டில், நிறுவன தயாரித்த இரண்டு படங்கள் - வெற்றிக் கொடி கட்டு மற்றும் கடல் பூக்கள் - தேசிய திரைப்பட விருதுகளை வென்றன. முரளி மற்றும் தேவயானி ஆகியோரைக் கொண்டு முருகனின் பக்திப் படமாக அறுபடை வீடு என்ற படத்தை தயாரிக்க பாண்டியன் நினைத்தார். ஆனால் இந்த முயற்சி பயன்பாட்டுக்கு வரவில்லை.[7][8] இதேபோல், ஜி. எஸ். கிருஷ்ணன் இயக்க நாகா என்ற பெயரிலான படத்தில் பிரசாந்த் நடிப்பதாக அறிவிக்கபட்ட படமானது அறிவிப்பு வெளிவந்த வெகுவிரைவிலேயே கைவிடப்பட்டது.[9][10] ஜெய் மற்றும் பூர்ணா நடித்த நிறுவனத்தின் பன்னிரண்டாவது படமான அர்ஜுனன் காதலி தயாரிப்பின் போது நிறுவனம் சரிவைக் கண்டது. இந்த படத்தின் தயாரிப்பானது 2008 ஆம் ஆண்டில் தொடங்கி மெதுவாக முன்னேறியது. 2010 திசம்பருக்குள், படத்திற்கான தனது பகுதிகளை முடித்ததாக ஜெய் அறிவித்தார். தயாரிப்பு பணிகள் முடிந்த போதிலும், இந்த படம் விநியோகஸ்தர் ஐங்கரன் இன்டர்நேசனலின் நிதி சிக்கல்களால் தாமதமானது, பின்னர் வெளியிடப்படாமல் உள்ளது. 2013 பெப்ரவரியில், சிவசக்தி பாண்டியன் படத்தை தணிக்கை செய்து முடித்தார். அதே நேரத்தில் படத்தின் இசை இரண்டு மாதங்கள் கழித்து வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், சேரன் தனது புதிய நேரடி டிவிடி தளமான சி 2 எச் மூலம் படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த முயற்சியின் தோல்வியால் அர்ஜுனன் காதலியின் வெளியீடு தாமதமானது.[11][12] நிறுவனத்தின்ஸ் மந்தநிலையைத் தொடர்ந்து, பாண்டியன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவி, மற்றும் தணிக்கை வாரிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை ஏற்றார்.[13][14] திரைப்படவியல்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia