சுனில் சத்திரபால் கேதார்
சுனில் சத்திரபால் கேதார் (Sunil Chhatrapal Kedar) (பிறப்பு: 7 மே 1961) மகாராஷ்டிரா அரசின் முன்னாள் அமைச்சரும்[1][2] , இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும் ஆவார். நாக்பூர் நகரத்தில் பிறந்த சுனில் சத்திரபால் கேதார்[3][4], சவ்னர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக 5 முறை வென்றுள்ளார். சுனில் கேதாரின் தந்தை சத்திரபால் ஆனந்தராவ் கேதார் மகாராட்டிர அரசின் முன்னாள் அமைச்சர் ஆவார்.[5]). தகுதி நீக்கம்இவர் 2002ல் நாக்பூர் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த காலத்தில், வங்கிப் பணத்தை தனியார் நிறுவனம் வாயிலாக நிதி முதலீடு செய்யும் போது விதிகள் மீறப்பட்டதில், வங்கிக்கு ரூபாய் 125 கோடி இழப்பு ஏற்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சுனில் சத்திரபால் கேதாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.. இதனால் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் இவரை 24 டிசம்பர் 2023 முதல் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[6] [7][8] [9] இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia