இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான ஒரு சட்டம், உறுப்பினர்களுக்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள், ஊழல் நடைமுறைகள் மற்றும் பிற குற்றங்கள் அல்லது அது தொடர்பாக எழும் சந்தேகங்கள் மற்றும் சச்சரவுகளை முடிவு செய்யும் சட்டம்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும். இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் இந்திய சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு முன், இந்திய அரசியலமைப்பின் 327வது பிரிவின் கீழ், தற்காலிக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.[1] நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1951ம் ஆண்டில் இச்சட்டத்தின் விதிமுறைகள் வெளியிடப்பட்டது. இச்சட்டம் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும் பட்டியலை திருத்தி அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவரிக்கிறது. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து செயல்பாடுகளும் 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடுதல், வேட்புமனுதாக்கல், மனுபரிசீலனை, மனு வாபஸ் பெறுதல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் இச்சட்டத்தின்படியே பின்பற்றப்படுகிறது.
மேலும் தேர்தல் முடிவுகள் அல்லது தேர்தல் தொடர்பாக எழுப்பப்படும் அனைத்து பிரச்னைகளும், வழக்குகளும் இச்சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப கையாளப்படுகின்றன. இந்த சட்டத்தின் கீழ் தேர்தல் தொடர்பான வழக்குகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரலாம். ஆனால், தேர்தல் முடிந்த பிறகே வழக்கு தொடர முடியும். தேர்தல் நடைமுறை செயல்பாட்டில் இருக்கும்போது இதுபோன்ற வழக்குகளை தொடர முடியாது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மற்றும் ஆணைய அதிகாரிகளின் செயல்பாட்டால் பாதிக்கப்படுவோர் இந்த சட்டத்தின் கீழ் தீர்வு காண முடியும்.
பின்னணி
அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 9 டிசம்பர் 1946 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையால் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் பெரும்பாலான சட்டப் பிரிவுகள் 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்ததது. அன்றைய நாள் குடியரசு நாள் என்று அழைக்கப்படுகிறது. அரசியலமைப்பின் XXI பகுதி மொழிபெயர்ப்பு விதிகளைக் கொண்டிருந்தது. பகுதி XXI இன் பிரிவுகள் 379 மற்றும் 394, தற்காலிக நாடாளுமன்றத்திற்கான விதிகள் மற்றும் குடியுரிமை போன்ற விதிகளைக் கொண்ட பிற கட்டுரைகள், அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான 26 நவம்பர் 1949 அன்று நடைமுறைக்கு வந்தது. 25 அக்டோபர் 1951 அன்று நடத்தப்பட்ட 1951 இந்தியப் பொதுத் தேர்தலுக்காக 1951 இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 43-கீழ் தற்காலிக நாடாளுமன்றம், மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அடிப்படை தகுதி, இந்திய குடியுரிமை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இன் பிரிவு 16 இன் கீழ் வாக்களிக்க தகுதியற்றவர்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.[2]
திருத்தங்கள்
சட்டம் பல முறை திருத்தப்பட்டது, ஆனால் சில குறிப்பிடத்தக்க திருத்தங்கள் அடங்கும். மக்கள் பிரதிநிதித்துவம் (திருத்தம்) சட்டம், 1966 (47 இன் 1966), இது தேர்தல் தீர்ப்பாயங்களை நீக்கியது மற்றும் தேர்தல் மனுக்களை உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றியது. அதன் உத்தரவுகளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.[3] இருப்பினும், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் உச்ச நீதிமன்றத்தால் நேரடியாக விசாரிக்கப்படும்.[4]
மக்கள் பிரதிநிதித்துவம் (திருத்தம் மற்றும் சரிபார்ப்பு) சட்டம், 2013 (29 இன் 2013)
மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த) மசோதா, 2016 மக்களவையில் வருண் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.[5]
செயல்பாடுகள்
அரசியல் கட்சிகளின் பதிவு இந்த சட்டத்தின் பிரிவு 29A இன் விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது.[6] இது நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறுப்பதற்கான நடைமுறைகளை வகுக்கிறது. மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான நடைமுறை, வாக்காளர்களின் தகுதியை நிர்ணயம் செய்தல், தொகுதிகளை வரையறுத்தல், மக்களவையில் பட்டியல் சமூகத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்தல். மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளைத் தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குகிறது. இச்சட்டப்படி கீழ்கண்டவர்களின் தேர்தல், பதவிக்காலம், வழக்குக்கள் ஆகியவைகள் குறித்து விளக்குகிறது.
மாநிலங்கள் & ஒன்றியப் பகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள்
இச்சட்டப்படி தகுதி நீக்கத்திற்கான காரணங்கள்
மத்திய & மாநில அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள், அரசு உதவி பெரும் பள்ளி அல்லது நிறுவனங்களின் ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளான நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய & மாநில அரசின் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 9 (ஏ) மற்றும் அரசியலமைப்பின் 102 மற்றும் 191 (இ) பிரிவுகளின் கீழ் லாபம் பெறும் பதவியை (Office of profit) வகிக்கக் கூடாது. மீறி வகித்தால் ஏற்கனவே வகித்து வரும் மக்கள் பிரதிநிதித்துவப் பணியை இழப்பர்.
குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கும் அதிக காலத்திற்கு சிறை தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். எடுத்துக்காட்டு: ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாள் 24 மார்ச் 2023[7]
இச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்