சுபேதார் ஜோகீந்தர் சிங்
சுபேதார் ஜோகீந்தர் சிங் ('Joginder Singh Sahnan), PVC (28 செப்டம்பர் 1921 – 23 அக்டோபர் 1962), இந்திய இராணுவத்தின் சீக்கிய ரெஜிமெண்டில் சிப்பாயாகச் சேர்ந்து, பின் சுபேதார் எனும் இளநிலை அதிகாரியாக போரின் போது இறந்தவர். இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 மற்றும் 1962 இந்திய சீனப் போர்களில் பங்காற்றியவர். 1962-இல் இந்திய-சீனப் போரின் போது வட கிழக்கு எல்லைப்புற முகமையில் உள்ள பூம் லா கணவாயில் உள்ள ஒரு நிலையை, தனது தலைமையிலான குறைந்த படைகளுடன் காத்துக் கொண்டிருந்த போது, சீனப் படைகள் சரமாரியாக தாக்கினர். இறுதியில் சீனர்களிடம் போர்க் கைதியாக பிடிபடும் வரை, தனது நிலையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து போராடினார்.[2] இந்திய-சீனப் போரில் காட்டிய வீரதீரச் செயல்களுக்காக இவருக்கு 1962-இல் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[3] இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிகக
|
Portal di Ensiklopedia Dunia