செம்பாக்கம்
செம்பாக்கம் (ஆங்கிலம்: Sembakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். அமைவிடம்செம்பாக்கம் பகுதி, காஞ்சிபுரத்திலிருந்து 60 கி.மீ.; தாம்பரத்திலிருந்து 5 கி.மீ.; சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அரசியல்செம்பாக்கம் பகுதி, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 11,668 வீடுகளும், 45,356 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] வரலாறுதேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த செம்பாக்கம், 2013-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5] செம்பாக்கம் நகராட்சியில் செம்பாக்கம், இராஜகீழ்பாக்கம் மற்றும் கௌரிவாக்கம் பகுதிகள் கொண்டது. தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்3 நவம்பர் 2021 அன்று செம்பாக்கம் பகுதி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia